Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே! கண்டபோதே சென்றன அங்கே!

Go down

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே! கண்டபோதே சென்றன அங்கே! Empty கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே! கண்டபோதே சென்றன அங்கே!

Post by oviya Sat Apr 11, 2015 3:09 pm

சூழ்நிலை எப்போதும் நம் விருப்பத்திற்கு ஏற்ப அமைவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கிறது.
* வாழ்வின் போக்கை தொடக்கத்திலேயே சீர்திருத்தி, படைப்பிற்கு மூலமான கடவுளைத் தேட முயல வேண்டும்.
* "இருதயம்' என்பது ரத்தத்தைச் சுத்திகரிக்கும் இடம் மட்டுமல்ல. இதற்கு "மையம்' என்றும் பொருள். இங்கிருந்தே எல்லா எண்ணங்களும் புறப்படுகின்றன.
* இந்த உலகம் முழுவதும் நம் உடலில் இருக்கிறது. உடலோ மனதிற்குள் அடங்கி விடும். எனவே, இயற்கையே இதயத்தில் அடங்கி இருக்கிறது.
* சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல, இதயம் மனதிற்கு ஒளி தருகிறது.
* "நான்' என்று ஒருவன் தன்னைக் குறிப்பிடும் போது அவனுடைய கை தானாகவே நெஞ்சைத் தொடுவதைக் காணலாம். அதனால் "நான்' என்ற தன்மையின் மூலமே இருதயம் தான்.
* மூளையைக் கொண்டு ஒரு செயலில் ஈடுபட்டால் தலைபாரம், சூடு, வலி உண்டாகும். ஆனால், மனதின் மூலம் கவனம் செலுத்தினால் குளிர்ச்சியும், புத்துணர்வும் உண்டாகும். இதைத் தான் "இதயபூர்வமாகச் செய்கிறேன்' என்று குறிப்பிடுவதுண்டு.
* கண்கள் வெளிப்பொருட்களையே பார்த்துக் கொண்டிருக்கும். மனம் அப்போது அங்கேயே சென்று விடும். கடவுளை அது நினைப்பதில்லை.
* மனம் என்பது என்ன என்று தேடிப் பார்த்தால், அப்படி ஒரு பொருள் தனியாக இல்லை என்பது புலனாகும். எண்ணங்களின் தொகுப்பே மனம். அது எப்போதும் "நான்' என்ற எண்ணத்தையே சார்ந்திருக்கிறது.
* மனம் உள் நோக்கி திரும்பினால் ஆன்மநிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும். புறவுலகம் நோக்கி திரும்பினால் ஆணவமாகத் தலைதூக்கும்.
* எண்ணத்தின் ஆற்றல் ஒருபோதும் வீணாகாது. ஒவ்வொரு எண்ணமும் எப்போதாவது அதற்கான பலனை விளைவித்தே தீரும்.
* சிந்திக்கும் போது மனம் வலிமை பெறுவதாக நினைக்கிறார்கள். ஆனால், எண்ணத்தில் இருந்து விடுபட்ட மனமே வலிமையானது.
* ஞான வழியில் உலகை நோக்கத் தொடங்கினால், காணும் யாவும் கடவுளின் வடிவமாகவே தெரியும்.
* அலைபாயும் மனம் பலவீனமடையும். அதை அடக்கியோ, அணைத்தோ கட்டுப்படுத்த முடியாது. ஒரே எண்ணத்தில் குவியத் தொடங்கினால், தான் மனம் வலிமை பெறும்.
* தோன்றி மறையக்கூடிய அகந்தை எண்ணத்தை தேடிப் பிடித்தால் அது ஓட்டம் எடுத்து விடும். எஞ்சி நிற்பது ஆன்மா மட்டுமே.
* "நான் யார்' என்று விசாரித்துக் கொண்டே இதயத்திற்குள் நுழைந்தால், அகந்தை வேரோடு சாய்ந்து விடும்.
* நீ நீயாக இரு. இழக்க வேண்டியது அகந்தை எண்ணம் மட்டுமே. இருப்பது எப்போதும் உன்னிடத்திலேயே இருக்கிறது.
* மந்திரங்களை இடைவிடாது ஜெபிப்பதால், மனம் அடங்கும். பயிற்சியால் மந்திரம், மனம், மூச்சு எல்லாம் ஒன்றாகி விடும்.
* மூச்சு என்னும் குதிரையில் மனம் சவாரி செய்கிறது. இந்த இரண்டையும் ஒன்றாக்கும் பயிற்சியே தியானம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum