Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தாயின் முகம் இங்கு நிழலாடுது! தந்தை மனம் இங்கு உறவாடுது!

Go down

தாயின் முகம் இங்கு நிழலாடுது! தந்தை மனம் இங்கு உறவாடுது! Empty தாயின் முகம் இங்கு நிழலாடுது! தந்தை மனம் இங்கு உறவாடுது!

Post by oviya Sat Apr 11, 2015 2:41 pm

எப்போதும் நல்லவனாக இருக்க அக்கறை செலுத்துங்கள். காலப்போக்கில் உங்களின் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
* அனைத்தும் மனதில் தான் இருக்கிறது. தூய்மை, தூய்மையின்மை என்னும் இரண்டும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.
* மனதில் தூய்மை இருக்குமானால், எண்ணும் எண்ணம், காணும் காட்சி, செய்யும் செயல் அனைத்திலும் அதன் பிரதிபலிப்பை காண முடியும்.
* கடமையை மட்டும் செய்து கொண்டிருங்கள். அதே சமயத்தில் ஆழ்மனதில் கடவுள் மீது அன்பு செலுத்துங்கள்.
* உலகின் நிலையாமையை உணர்ந்து விட்டால், கடவுளின் திருவடிகளில் சரணடைவது எளிய காரியம் தான்.
* பயப்பட வேண்டாம்! கலியுகத்தில், மனதால் செய்யும் பாவம் பாவமே ஆகாது. அதனை எண்ணிச் சிறிதும் வருந்த வேண்டாம்.
* ஈடுபடும் செயலில் வெற்றி பெற வேண்டுமானால், உடல் உழைப்பும், விடாமுயற்சியும் மிக அடிப்படையானவை.
* உண்மையான பக்தி இருக்குமானால், புனிதப் பயணத்தால் ஏற்படும் பயனை விட அதிகமாகவே வீட்டில் இருந்தே கூட பெற முடியும்.
* ஆசை இருக்கும் வரை பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டேயிருக்கும். நுண்ணிய விதை போல இருக்கும் ஆசை பெரிய ஆலவிருட்சம் போல வளர்ந்து விடும் ஆற்றல் படைத்தது.
* மனிதன் தனக்குத் தேவையானதை தேடுவதில் அக்கறை காட்டுவதில்லை. குறுகிய புத்தியின் காரணமாக வேண்டாதவற்றை சிந்தித்துக் கொண்டிருக்கிறான்.
* உலகிலுள்ள அனைவரும் ஆசை எண்ணங்களைத் துறந்து விட்டால், இந்த உலகமே முடிவிற்கு வந்து விடும்.
* கடவுளே தாயும், தந்தையுமாக இருந்து நம்மை வழி நடத்துகிறார். அவரைப் பிரார்த்திப்பவர்கள், தங்களுக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்து எளிதாக விடுதலை அடைகின்றனர்.
* சாதிக்க முடியாததையும் சாதிக்கும் திறன் பக்திக்கு மட்டுமே இருக்கிறது என்ற உண்மையை அனுபவத்தின் வாயிலாக மட்டுமே உணர முடியும்.
* அன்பின்றி ஆண்டவனை அறிய முடியாது. பக்திக்கு அடிப்படை உண்மையான அன்பு மட்டுமே.
* சந்தேகம், நம்பிக்கை இரண்டுமே மனதில் எழுகிறது. சந்தேகத்தை புறக்கணித்து விட்டு நம்பிக்கையில் உறுதி கொண்டு நில்லுங்கள்.
* தூங்கிக் கொண்டிருக்கும் சோம்பலை விட்டு, சுறுசுறுப்புடன் பணியாற்றுங்கள். தோள்களை நிமிர்த்தி, அரிய செயல்களை வாழ்வில் சாதித்துக் காட்டுங்கள்.
* இரும்பு யுகமான இந்த கலியுகத்தில் சத்தியத்தைக் கடைபிடிப்பதே பெருந்தவம். அதைப் பின்பற்றினால் தெய்வீக நிலையை அடையலாம்.
* தாய், தந்தையரை காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை. அவர்களிடம் உள்ள சொத்துக்காக மதிப்பு அளிப்பது என்பது நன்றியற்றவர்களின் செயல்.
* பொறுமைக்கு நிகரான பண்பு வேறில்லை. அதுவும் பொறுமை பெண்களுக்கு பன்மடங்கு சிறப்பைத் தருகிறது.
* உண்மை என்பதற்காக பிறருக்கு துன்பம் தரும் விஷயங்களை கண்மூடித்தனமாகச் சொல்வது இரக்கமற்ற மனிதர்களின் செயல்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum