Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்

Go down

நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும் Empty நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்

Post by oviya Sat Apr 11, 2015 2:14 pm

* உலகம் முழுவதையும் இயக்குபவர் கடவுள். அவரே நம்மைச் சூழ்ந்திருக்கும் அத்தனை உயிர்களாகவும் இருக்கிறார்.
* நடந்தது எல்லாம் போகட்டும். இனிமேல் நடக்க வேண்டிய செயலில் கண்ணும் கருத்துமாக ஈடுபடுங்கள்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே கண் படைத்தவன். இது தான் நம் முன்னோர்களின் கொள்கை. வேதத்தின் முடிவான கருத்தும் இதுவே.
* தெய்வத்தைக் கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் சத்தியநெறி தவறாமல் நடப்பவனுக்கு தெய்வம் நிச்சயம் அருள்புரியும்.
* துளி கூட இன்னும் சொல்லப்போனால் ஓர் அணு கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் முடிவெடுத்துவிட்டால் அவனே ஈஸ்வரன்.
* சகல பாரத்தையும் கடவுள் மீது போட்டு விட்டு நடப்பவனுக்கு தெய்வத் தன்மை உண்டாகும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
* குருவி, காக்கை, ஈ, எறும்பு போன்ற பலவீனமான உயிர்களுக்கும் வஞ்சனை செய்வது கூடாது. எல்லா உயிர்களையும் நேசித்து வாழுங்கள்.
* "காலம் பண விலை உடையது' என்ற குறிப்புடைய ஆங்கிலப் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த விஷயம் நம்மவர்களுக்குத் தெரிவதே இல்லை.
* பொழுது வீணே கழிந்தால் அதனால் பணலாபம் கிடைக்காமல் போகலாம். இன்று செய்ய வேண்டியதை நாளை செய்யலாம் என தாமதப்படுத்தக் கூடாது.
* வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும், செய்கை வேறொரு விதமாகவும் உடையவர்களின் உறவு கனவிலும் ஏற்றுக் கொள்வது கூடாது.
* நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மை பிறர் தட்டிக்கொடுக்க மாட்டார்கள். குறை சொல்லவும் செய்வார்கள். ஆனால், நம்பிக்கையுடன் முயற்சியில் ஈடுபட்டு வந்தால் நாளடைவில் அவர்களே தானாக முன்வந்து உதவுவார்கள்.
* மனிதனுக்குப் பகைவர்கள் புற உலகத்தில் இல்லை. மனதுக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். அவர்கள் பயம், சந்தேகம், சோம்பல் என்னும் பெயரில் மனதிற்குள் மலிந்து கிடக்கிறார்கள்.
* எத்தனை பெரிய ஆபத்துகள் குறுக்கிட்டாலும், நம்பிக்கை என்னும் ஒளியை மனதிற்குள் ஏற்றி விட்டால் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க முடியும்.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாக உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.
* வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டத்தைப் பொருட்படுத்த வேண்டாம். உண்மை என்று கண்டவழியில் செல்லும் துணிவு வேண்டும்.
* அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும். எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம்.
* தன்னைத் தானே செம்மைப்படுத்திக் கொண்டு வாழ்வதே மனிதனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
* நானே எல்லாவிதத்திலும் கைதேர்ந்தவன் என்று ஒருபோதும் கர்வம் கொள்வது கூடாது. அப்படி எண்ணும் பொழுதே ஒருவன் எல்லாவற்றையும் இழக்க ஆரம்பித்து விடுகிறான்.
* நீ செல்லும் பாதையில் ஒரு கணப்பொழுதும் சோம்பல் கூடாது. கவனமாக செயல்களைச் செய்பவனின் வாழ்வில் நடப்பதெல்லாம் நலமாகவே இருக்கும்.
* தன்னைப் பற்றிச் சிந்தனை செய்வதால் பயனுண்டாகும். பிறரது குறை பற்றி யோசிப்பதால் பலன் ஏதுமில்லை.
* வேகத்துடன் மேலேறிச் செல்வது பெரிதல்ல. எப்போதும் மேல் நோக்கி ஏறிச் செல்ல வேண்டும். அதுவே சிறப்பானது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum