Top posting users this month
No user |
Similar topics
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்
Page 1 of 1
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்
* உலகம் முழுவதையும் இயக்குபவர் கடவுள். அவரே நம்மைச் சூழ்ந்திருக்கும் அத்தனை உயிர்களாகவும் இருக்கிறார்.
* நடந்தது எல்லாம் போகட்டும். இனிமேல் நடக்க வேண்டிய செயலில் கண்ணும் கருத்துமாக ஈடுபடுங்கள்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே கண் படைத்தவன். இது தான் நம் முன்னோர்களின் கொள்கை. வேதத்தின் முடிவான கருத்தும் இதுவே.
* தெய்வத்தைக் கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் சத்தியநெறி தவறாமல் நடப்பவனுக்கு தெய்வம் நிச்சயம் அருள்புரியும்.
* துளி கூட இன்னும் சொல்லப்போனால் ஓர் அணு கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் முடிவெடுத்துவிட்டால் அவனே ஈஸ்வரன்.
* சகல பாரத்தையும் கடவுள் மீது போட்டு விட்டு நடப்பவனுக்கு தெய்வத் தன்மை உண்டாகும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
* குருவி, காக்கை, ஈ, எறும்பு போன்ற பலவீனமான உயிர்களுக்கும் வஞ்சனை செய்வது கூடாது. எல்லா உயிர்களையும் நேசித்து வாழுங்கள்.
* "காலம் பண விலை உடையது' என்ற குறிப்புடைய ஆங்கிலப் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த விஷயம் நம்மவர்களுக்குத் தெரிவதே இல்லை.
* பொழுது வீணே கழிந்தால் அதனால் பணலாபம் கிடைக்காமல் போகலாம். இன்று செய்ய வேண்டியதை நாளை செய்யலாம் என தாமதப்படுத்தக் கூடாது.
* வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும், செய்கை வேறொரு விதமாகவும் உடையவர்களின் உறவு கனவிலும் ஏற்றுக் கொள்வது கூடாது.
* நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மை பிறர் தட்டிக்கொடுக்க மாட்டார்கள். குறை சொல்லவும் செய்வார்கள். ஆனால், நம்பிக்கையுடன் முயற்சியில் ஈடுபட்டு வந்தால் நாளடைவில் அவர்களே தானாக முன்வந்து உதவுவார்கள்.
* மனிதனுக்குப் பகைவர்கள் புற உலகத்தில் இல்லை. மனதுக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். அவர்கள் பயம், சந்தேகம், சோம்பல் என்னும் பெயரில் மனதிற்குள் மலிந்து கிடக்கிறார்கள்.
* எத்தனை பெரிய ஆபத்துகள் குறுக்கிட்டாலும், நம்பிக்கை என்னும் ஒளியை மனதிற்குள் ஏற்றி விட்டால் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க முடியும்.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாக உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.
* வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டத்தைப் பொருட்படுத்த வேண்டாம். உண்மை என்று கண்டவழியில் செல்லும் துணிவு வேண்டும்.
* அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும். எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம்.
* தன்னைத் தானே செம்மைப்படுத்திக் கொண்டு வாழ்வதே மனிதனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
* நானே எல்லாவிதத்திலும் கைதேர்ந்தவன் என்று ஒருபோதும் கர்வம் கொள்வது கூடாது. அப்படி எண்ணும் பொழுதே ஒருவன் எல்லாவற்றையும் இழக்க ஆரம்பித்து விடுகிறான்.
* நீ செல்லும் பாதையில் ஒரு கணப்பொழுதும் சோம்பல் கூடாது. கவனமாக செயல்களைச் செய்பவனின் வாழ்வில் நடப்பதெல்லாம் நலமாகவே இருக்கும்.
* தன்னைப் பற்றிச் சிந்தனை செய்வதால் பயனுண்டாகும். பிறரது குறை பற்றி யோசிப்பதால் பலன் ஏதுமில்லை.
* வேகத்துடன் மேலேறிச் செல்வது பெரிதல்ல. எப்போதும் மேல் நோக்கி ஏறிச் செல்ல வேண்டும். அதுவே சிறப்பானது.
* நடந்தது எல்லாம் போகட்டும். இனிமேல் நடக்க வேண்டிய செயலில் கண்ணும் கருத்துமாக ஈடுபடுங்கள்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே கண் படைத்தவன். இது தான் நம் முன்னோர்களின் கொள்கை. வேதத்தின் முடிவான கருத்தும் இதுவே.
* தெய்வத்தைக் கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் சத்தியநெறி தவறாமல் நடப்பவனுக்கு தெய்வம் நிச்சயம் அருள்புரியும்.
* துளி கூட இன்னும் சொல்லப்போனால் ஓர் அணு கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் முடிவெடுத்துவிட்டால் அவனே ஈஸ்வரன்.
* சகல பாரத்தையும் கடவுள் மீது போட்டு விட்டு நடப்பவனுக்கு தெய்வத் தன்மை உண்டாகும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
* குருவி, காக்கை, ஈ, எறும்பு போன்ற பலவீனமான உயிர்களுக்கும் வஞ்சனை செய்வது கூடாது. எல்லா உயிர்களையும் நேசித்து வாழுங்கள்.
* "காலம் பண விலை உடையது' என்ற குறிப்புடைய ஆங்கிலப் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த விஷயம் நம்மவர்களுக்குத் தெரிவதே இல்லை.
* பொழுது வீணே கழிந்தால் அதனால் பணலாபம் கிடைக்காமல் போகலாம். இன்று செய்ய வேண்டியதை நாளை செய்யலாம் என தாமதப்படுத்தக் கூடாது.
* வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும், செய்கை வேறொரு விதமாகவும் உடையவர்களின் உறவு கனவிலும் ஏற்றுக் கொள்வது கூடாது.
* நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மை பிறர் தட்டிக்கொடுக்க மாட்டார்கள். குறை சொல்லவும் செய்வார்கள். ஆனால், நம்பிக்கையுடன் முயற்சியில் ஈடுபட்டு வந்தால் நாளடைவில் அவர்களே தானாக முன்வந்து உதவுவார்கள்.
* மனிதனுக்குப் பகைவர்கள் புற உலகத்தில் இல்லை. மனதுக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். அவர்கள் பயம், சந்தேகம், சோம்பல் என்னும் பெயரில் மனதிற்குள் மலிந்து கிடக்கிறார்கள்.
* எத்தனை பெரிய ஆபத்துகள் குறுக்கிட்டாலும், நம்பிக்கை என்னும் ஒளியை மனதிற்குள் ஏற்றி விட்டால் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க முடியும்.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாக உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.
* வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டத்தைப் பொருட்படுத்த வேண்டாம். உண்மை என்று கண்டவழியில் செல்லும் துணிவு வேண்டும்.
* அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும். எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம்.
* தன்னைத் தானே செம்மைப்படுத்திக் கொண்டு வாழ்வதே மனிதனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
* நானே எல்லாவிதத்திலும் கைதேர்ந்தவன் என்று ஒருபோதும் கர்வம் கொள்வது கூடாது. அப்படி எண்ணும் பொழுதே ஒருவன் எல்லாவற்றையும் இழக்க ஆரம்பித்து விடுகிறான்.
* நீ செல்லும் பாதையில் ஒரு கணப்பொழுதும் சோம்பல் கூடாது. கவனமாக செயல்களைச் செய்பவனின் வாழ்வில் நடப்பதெல்லாம் நலமாகவே இருக்கும்.
* தன்னைப் பற்றிச் சிந்தனை செய்வதால் பயனுண்டாகும். பிறரது குறை பற்றி யோசிப்பதால் பலன் ஏதுமில்லை.
* வேகத்துடன் மேலேறிச் செல்வது பெரிதல்ல. எப்போதும் மேல் நோக்கி ஏறிச் செல்ல வேண்டும். அதுவே சிறப்பானது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தாயின் முகம் இங்கு நிழலாடுது! தந்தை மனம் இங்கு உறவாடுது!
» அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்
» சுடர் விடும் தீபங்கள்
» அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்
» சுடர் விடும் தீபங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum