Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஈழத்தமிழருக்கு சார்பாக கனேடிய நீதிமன்றம் தீர்ப்பு

Go down

ஈழத்தமிழருக்கு சார்பாக கனேடிய நீதிமன்றம் தீர்ப்பு Empty ஈழத்தமிழருக்கு சார்பாக கனேடிய நீதிமன்றம் தீர்ப்பு

Post by oviya Sat Apr 11, 2015 12:47 pm

இலங்கை தமிழர் ஒருவர் நாடு கடத்தப்படுவதை கனேடிய பிராந்திய நீதிமன்றம் ஒன்று தடுத்துள்ளது.
அவர் பலாத்காரமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால், உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியே நீதிபதி சீன் ஹரிங்டன் இந்த நாடு கடத்தலை தடுக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்தவருக்கு இலங்கையில் ஆபத்தில்லை என்று கனேடிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்த கருத்தையும் அவர் நிராகரித்தார்.

விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் வரி அறவிடும் பணியை மேற்கொண்டு வந்தாக கூறப்படும் புவநேசன் துரைராஜா என்பவர் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர் பிரித்தானியாவுக்கு சென்று அடைக்கலம் கோரியபோதும் அது நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து போலியான கடவுச்சீட்டை காண்பித்து அவர் கனடாவுக்குள் பிரவேசித்தார்.

இந்தநிலையில் போர்க்காலத்தில் விடுதலைப்புலிகள் பலாத்காரமாகவே வரியை அறிவிட்டனர் என்ற அடிப்படையில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகளின் நிதி திணைக்களத்தில் பணியாற்றியமை காரணமாக அவருக்கு விடுதலைப் புலிகள் மேற்கொள்கின்ற குற்றங்கள் தெரிந்திருந்தன என்றும் பொலிஸார் புவநேசன் மீது குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும் புவநேசன் குற்றத்தை செய்ய பயன்படுத்தப்பட்டவரே ஒழிய குற்றமுள்ளவர் அல்லர் என்று நீதிபதி தமது தீர்ப்பில் எழுதியுள்ளார்.

எனவே இலங்கையில் அவருக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளமையால் அவர் கனேடிய பாதுகாப்பில் இருக்க வேண்டியவர் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum