Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இனப்பிரச்சினை தீர்வுக்காக ஹெல உறுமயவும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும் பேச்சுநடத்த வேண்டும்: தென்னாபிரிக்கா

Go down

இனப்பிரச்சினை தீர்வுக்காக ஹெல உறுமயவும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும் பேச்சுநடத்த வேண்டும்: தென்னாபிரிக்கா Empty இனப்பிரச்சினை தீர்வுக்காக ஹெல உறுமயவும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும் பேச்சுநடத்த வேண்டும்: தென்னாபிரிக்கா

Post by oviya Fri Apr 10, 2015 12:30 pm

இலங்கையில் தற்போது நல்லிணக்கம் ஏற்படுத்தபடாவிட்டால் இன்னும் 40 வருடங்கள் சென்றாலும் நல்லிணக்கத்தை கொண்டு வரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய ஐவர் எச்.ஜென்கின்ஸ் என்பவரே இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க பிரச்சினை தீர்வை அடுத்து இவருக்கு சிக்காக்கோவின் நோத் பார்க் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்தது. இவர் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த 8வருடங்களாக ஈடுபாட்டைக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் இலங்கை தொடர்பில் சிங்கப்பூரில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போதும் இவரே தென்னாபிரிக்கா சார்பில் பங்கேற்றிருந்தார்.

தென்னாபிரிக்காவில் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக போராடிய போது ஜென்கின்ஸ் அச்சுறுத்தப்பட்டார். அத்துடன் அவரின் வீட்டின் மீதும் துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் தென்னாபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கொண்ட 10 தலைவர்கள் நீக்கப்பட்டமையை அடுத்தே அங்கு சமாதானம் நிலைப்பெற்றது.

அதேபோன்று இலங்கையிலும் 2015 ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் இயல்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவறவிடக்கூடாது என்று ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் குழுவே இலங்கையிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அந்த அனுபவங்களை கொண்டு இலங்கையின் பிரச்சினையை தீர்ப்பற்கான பொறிமுறையே அவசியமானதாகவும் போர் நடக்கலாம்ää பலர் கொல்லப்படலாம்.

எனினும் இறுதியில் பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமே பிரச்சினைக்கு தீர்வை எட்டமுடியும் என்று தென்னாபிரிக்காவின் தேசிய தலைவர் நெல்சன் மண்டேலா தெரிவித்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான சந்தேகங்கள் நீக்கப்படவேண்டும்.

இதற்காக முக்கிய பாத்திரங்களை கொண்டுள்ள ஜாதிக ஹெல உறுமய மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு தயாராக வேண்டும்.

இதன்போது சந்தேகத்தை தீர்த்து பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியும் ஜென்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum