Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழர்களுடைய கலைகள் பாதுகாக்கப்படுவது பல்லின சமுதாயத்திற்கு இன்றியமையாதது!– பற்றிக் பிரவுண்

Go down

தமிழர்களுடைய கலைகள் பாதுகாக்கப்படுவது பல்லின சமுதாயத்திற்கு இன்றியமையாதது!– பற்றிக் பிரவுண் Empty தமிழர்களுடைய கலைகள் பாதுகாக்கப்படுவது பல்லின சமுதாயத்திற்கு இன்றியமையாதது!– பற்றிக் பிரவுண்

Post by oviya Tue Apr 07, 2015 2:00 pm

தமிழர்களுடைய பாராம்பரியக் கலைகளும், பண்பாடுகளும் பாதுகாக்கப்படுவதும், அவை தொடர்ந்தும் கனடாவில் வளர்க்கப்பட்டுவருவதும் பல்லின சமூகக் கட்டமைப்பினை ஸ்திரப்படுத்துமென திரு. பற்றிக் பிரவுண் அவர்கள் தெரிவித்தார்.
ஒன்றாரியோ மாகாண புரக்கிரசிவ் கன்சவேட்டிவின் தலைவருக்கான முதன்மை வேட்பாளராகத் திகழும் திரு. பற்றிக் பிரவுண் அவர்கள் திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் நடனக் கல்லூரி கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட 25வது வருட நிறைவிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் முதன்மை மாணவிகளில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் பரதநாட்டிய நடன நிகழ்வொன்றை வழங்கியதுடன், சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார்.

அவ்விழாவில் திரு பற்றிக் பிரவுண் மேலும் பேசுகையில்,

கனடாவிற்கு பல ஆண்டுகளிற்கு முன்னர் புலம்பெயர்ந்து வந்த சமூகங்கங்கள் பலவும் தங்களிற்கான கலச்சார நிலையங்களை அமைத்து தமது கலைகளையும், பாராம்பரிய விளையாட்டுக்களையும் பேணி வருகின்றன.

எனவே யூதர்கள், சீனர்கள், இந்தியர்கள், இத்தாலியர்கள், ஆர்மேனியர்கள் போன்று தமிழர்களும் தங்களுக்கென்றொரு கலாச்சார நிலையத்தை அமைக்க தமது சமூகம் சார்ந்த பங்களிப்புகளையும் வழங்கி தனிப்பட்ட நிதியாளர்கள் மற்றும் மாகாண, மத்திய, மாநகர அரசுகளின் துணையோடு இவ்வாறு செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum