Top posting users this month
No user |
சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம்..பரிதாபமாக போன உயிர்
Page 1 of 1
சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம்..பரிதாபமாக போன உயிர்
டெல்லியில் சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் Turkman gate பகுதியில், ஞாயிற்று கிழமை காலை தனது 2 மகன்களுடன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த ஷாநவாஸ் என்ற நபர், ஒரு காரின் மீது மோதியுள்ளார்.
இதனால் காரில் இருந்தவர்களுக்கும் ஷாநவாஸுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.
இந்த தாக்குதலில் ஷாநவாஸ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பத்தை நேரில் பார்த்த ஷாநவாஸின் மகன் கூறுகையில், என் தந்தையை அடிக்கும் போது அதனை தடுப்பதற்கு பொலிசார் எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்தனர் என்று தெரிவித்துள்ளான்.
மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறுகையில், ஷாநவாஸ் உள்ளூரில் கட்டிட தொழில் செய்பவர் என்றும், அவர் தாக்கப்படும் போது யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் உடனடி நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றும் சம்பந்தபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் ஷாநவாஸ் தாயார் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தற்போது இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள பொலிசார், கொலைவழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதோடு அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், உள்ளூர் மக்களும் இது தொடர்பாக போராட்டத்தில் குதித்ததால் அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. எனவே பாதுகாப்பிற்காக அங்கு அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் Turkman gate பகுதியில், ஞாயிற்று கிழமை காலை தனது 2 மகன்களுடன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த ஷாநவாஸ் என்ற நபர், ஒரு காரின் மீது மோதியுள்ளார்.
இதனால் காரில் இருந்தவர்களுக்கும் ஷாநவாஸுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.
இந்த தாக்குதலில் ஷாநவாஸ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பத்தை நேரில் பார்த்த ஷாநவாஸின் மகன் கூறுகையில், என் தந்தையை அடிக்கும் போது அதனை தடுப்பதற்கு பொலிசார் எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்தனர் என்று தெரிவித்துள்ளான்.
மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறுகையில், ஷாநவாஸ் உள்ளூரில் கட்டிட தொழில் செய்பவர் என்றும், அவர் தாக்கப்படும் போது யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் உடனடி நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றும் சம்பந்தபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் ஷாநவாஸ் தாயார் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தற்போது இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள பொலிசார், கொலைவழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதோடு அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், உள்ளூர் மக்களும் இது தொடர்பாக போராட்டத்தில் குதித்ததால் அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. எனவே பாதுகாப்பிற்காக அங்கு அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum