Top posting users this month
No user |
கஹவத்தையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
Page 1 of 1
கஹவத்தையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
கஹவத்த, கொட்டகெத்தென்ன பகுதியில் காணாமல் போன 39 வயதுடைய பெண், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை முதல் குறித்த பெண் காணாமல் போயிருந்தை நிலையில்,அப்பெண்ணை தேடும் பணியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஈடுப்பட்டுவந்தனர்.
சந்திராணி சுவர்ணலதா என்ற 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
இச்சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பெண்ணின் கணவர் வீட்டிற்கு அருகில் உள்ள மரண வீடொன்றிற்கு சென்றிருந்தார் எனவும் கணவர் மீண்டும் இரவு 1 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் மேற்கொண்ட தேடுதலில் கொட்டகெத்தென்ன பகுதி வாவி ஒன்றில் இருந்து குறித்த பெண் சடலமாக மீ்ட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கஹவத்தை கொட்டகெத்தென்ன பகுதியில் பெண்கள் தொடர்ந்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளமை அப்பிரதேச மக்கள் இடையே கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை முதல் குறித்த பெண் காணாமல் போயிருந்தை நிலையில்,அப்பெண்ணை தேடும் பணியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஈடுப்பட்டுவந்தனர்.
சந்திராணி சுவர்ணலதா என்ற 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
இச்சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பெண்ணின் கணவர் வீட்டிற்கு அருகில் உள்ள மரண வீடொன்றிற்கு சென்றிருந்தார் எனவும் கணவர் மீண்டும் இரவு 1 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் மேற்கொண்ட தேடுதலில் கொட்டகெத்தென்ன பகுதி வாவி ஒன்றில் இருந்து குறித்த பெண் சடலமாக மீ்ட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கஹவத்தை கொட்டகெத்தென்ன பகுதியில் பெண்கள் தொடர்ந்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளமை அப்பிரதேச மக்கள் இடையே கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum