Top posting users this month
No user |
Similar topics
தலைவர் ஒருவரை ஏற்கும் பண்பு தமிழரிடம் இருக்க வேண்டும்!
Page 1 of 1
தலைவர் ஒருவரை ஏற்கும் பண்பு தமிழரிடம் இருக்க வேண்டும்!
தமிழ் அரசியல் தலைமையில் பலவீனம் பற்றி சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துள்ளது. இராஜதந்திரம் மருந்துக்கும் இல்லை என்ற உண்மையை இந்தியப் பிரதமரும் அறிந்ததன் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவர் சில புத்திமதிகளைக் கூறிச் சென்றார்.
இவ்வாறு இராஜதந்திரம் இன்மைக்கு தமிழ் அரசியல் என்பது பதவிக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் செய்யப்படுவதாகி விட்டதே காரணமாகும்.
அரசியல் என்பது விழித்திருந்து மக்களுக்காகப் பணி புரிகின்ற ஒரு பெரும் தியாகம். அந்தத் தியாகத்தை பகுதி நேரமாக்கினால் அல்லது நேரம் கிடைக்கும் போது பார்ப்பது என்ற நிலைமைக்குக் கொண்டு வந்தால் எல்லாமுமே பழுதாகி விடும். எனினும் அத்தகையதொரு பழுது நிலை நம் தமிழ் அரசியலில் ஏற்பட்டு விட்டது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவம் மிகவும் முக்கியமானது. முதலில் எங்களிடம் இருக்கக் கூடிய பலவீனம் பற்றி நாம் ஆய்வு செய்யவேண்டும்.
அத்தகையதொரு ஆய்வு நடக்குமாயின் தமிழ் அரசியல்வாதிகளிடம் தற்போது இருக்கக் கூடிய பெரிய பலவீனம் ஒரு தலைமையை-ஒரு தலைவனை ஏற்றுக் கொள்ளுகின்ற மனநிலை இல்லாமையாகும்.
அதாவது, அரசியலில் ஈடுபடுகின்ற எல்லோரும் தங்களைத் தலைவர்களாக்க முயற்சித்தால் அல்லது அந்த நினைப்போடு செயற்பட்டால் அரசியல் என்பது இராஜதந்திரம் அற்றதாகவே இருக்கும்.
இதுவே எங்களிடம் இப்போது இருக்கின்ற நிலைமை. ஆகவே எங்களின் பலவீனத்தை அறிந்து அதைச் சரிப்படுத்தும் போதுதான் எங்களால் எங்களுக்கான உரிமைக்காகப் போராடமுடியும்.
பலவீனமான, ஒற்றுமையில்லாத, ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு செயலாற்ற முடியாத அரசியல் தரப்பால் எந்த சாதனையையும் படைக்க முடியாது என்பது நிறுதிட்டமான உண்மை.
ஆகவே, முதலில் தமிழ் அரசியல் என்பது ஒரு தலைவனுக்கு கீழ் இயங்குகின்ற கடுமையான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆளுக்கு ஆள் அறிக்கை விடுவது, ஆளுக்கு ஆள் தன்னிச்சையாக செயற்படுவது என்பன அரசியல் கட்டமைப்பை உடைத்து விடுவதுடன் அது எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் இராஜதந்திர வியூகங்கள் வெற்றி பெறுவதற்கும் உதவி விடும் என்பதால், தமிழ் அரசியல்வாதிகள் ஒரு தலைமைக்குக் கீழ் இயங்குவதுடன் இறுக்கமான நிபந்தனைகள், விதி முறைகள் என்பவற்றை அனுசரித்து எச்சந்தர்ப்பத்திலும் தான் சார்ந்த அரசியல் அமைப்பு சோடை போகாமல் இருக்கவேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதியும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியல் தலைமை என்பதை பாதுகாக்க முடியும்.
அதேநேரம் தமிழ் அரசியல் தலைமையை ஏற்பவர் தான் நினைத்தபடி செயற்படாமல் அல்லது ஒரு சிலரின் ஆலோசனைப்படி இயங்காமல் தனது அமைப்புக்கு உட்பட்ட ஏனைய அரசியல்வாதிகளுட னும் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பது, அறிக்கைகளை விடுவது என்ற சிறந்த தலைமைத்துவப் பண்பைப் பேணவேண்டும்.
இதுவே ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடிய சிறப்பாகும். இத்தகைய தலைமை இருக்கும் போது அந்தத் தலைமைக்குக் கட்டுப்படவேண்டும் என்ற மனநிலையை குறித்த அரசியல்வாதிகளும் கொண்டிருப்பர்.
இப்படியானதொரு சூழ்நிலையிலேயே தமிழ் அரசியல் தலைமை கனகாத்திரமாக இயங்க முடியும்.
இவ்வாறு இராஜதந்திரம் இன்மைக்கு தமிழ் அரசியல் என்பது பதவிக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் செய்யப்படுவதாகி விட்டதே காரணமாகும்.
அரசியல் என்பது விழித்திருந்து மக்களுக்காகப் பணி புரிகின்ற ஒரு பெரும் தியாகம். அந்தத் தியாகத்தை பகுதி நேரமாக்கினால் அல்லது நேரம் கிடைக்கும் போது பார்ப்பது என்ற நிலைமைக்குக் கொண்டு வந்தால் எல்லாமுமே பழுதாகி விடும். எனினும் அத்தகையதொரு பழுது நிலை நம் தமிழ் அரசியலில் ஏற்பட்டு விட்டது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவம் மிகவும் முக்கியமானது. முதலில் எங்களிடம் இருக்கக் கூடிய பலவீனம் பற்றி நாம் ஆய்வு செய்யவேண்டும்.
அத்தகையதொரு ஆய்வு நடக்குமாயின் தமிழ் அரசியல்வாதிகளிடம் தற்போது இருக்கக் கூடிய பெரிய பலவீனம் ஒரு தலைமையை-ஒரு தலைவனை ஏற்றுக் கொள்ளுகின்ற மனநிலை இல்லாமையாகும்.
அதாவது, அரசியலில் ஈடுபடுகின்ற எல்லோரும் தங்களைத் தலைவர்களாக்க முயற்சித்தால் அல்லது அந்த நினைப்போடு செயற்பட்டால் அரசியல் என்பது இராஜதந்திரம் அற்றதாகவே இருக்கும்.
இதுவே எங்களிடம் இப்போது இருக்கின்ற நிலைமை. ஆகவே எங்களின் பலவீனத்தை அறிந்து அதைச் சரிப்படுத்தும் போதுதான் எங்களால் எங்களுக்கான உரிமைக்காகப் போராடமுடியும்.
பலவீனமான, ஒற்றுமையில்லாத, ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு செயலாற்ற முடியாத அரசியல் தரப்பால் எந்த சாதனையையும் படைக்க முடியாது என்பது நிறுதிட்டமான உண்மை.
ஆகவே, முதலில் தமிழ் அரசியல் என்பது ஒரு தலைவனுக்கு கீழ் இயங்குகின்ற கடுமையான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆளுக்கு ஆள் அறிக்கை விடுவது, ஆளுக்கு ஆள் தன்னிச்சையாக செயற்படுவது என்பன அரசியல் கட்டமைப்பை உடைத்து விடுவதுடன் அது எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் இராஜதந்திர வியூகங்கள் வெற்றி பெறுவதற்கும் உதவி விடும் என்பதால், தமிழ் அரசியல்வாதிகள் ஒரு தலைமைக்குக் கீழ் இயங்குவதுடன் இறுக்கமான நிபந்தனைகள், விதி முறைகள் என்பவற்றை அனுசரித்து எச்சந்தர்ப்பத்திலும் தான் சார்ந்த அரசியல் அமைப்பு சோடை போகாமல் இருக்கவேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதியும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியல் தலைமை என்பதை பாதுகாக்க முடியும்.
அதேநேரம் தமிழ் அரசியல் தலைமையை ஏற்பவர் தான் நினைத்தபடி செயற்படாமல் அல்லது ஒரு சிலரின் ஆலோசனைப்படி இயங்காமல் தனது அமைப்புக்கு உட்பட்ட ஏனைய அரசியல்வாதிகளுட னும் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பது, அறிக்கைகளை விடுவது என்ற சிறந்த தலைமைத்துவப் பண்பைப் பேணவேண்டும்.
இதுவே ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடிய சிறப்பாகும். இத்தகைய தலைமை இருக்கும் போது அந்தத் தலைமைக்குக் கட்டுப்படவேண்டும் என்ற மனநிலையை குறித்த அரசியல்வாதிகளும் கொண்டிருப்பர்.
இப்படியானதொரு சூழ்நிலையிலேயே தமிழ் அரசியல் தலைமை கனகாத்திரமாக இயங்க முடியும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் கண்ணாக இருக்க வேண்டும்: கி.துரைராஜசிங்கம்
» ஐ.ம.சு. முன்னணியின் தலைவர் பதவியை ஜனாதிபதி துறக்க வேண்டும்: உதய கம்மன்பில
» எதிர்க்கட்சித் தலைவர் பதவி எங்களுக்கே தரப்பட வேண்டும்! மஹிந்த தரப்பு தொடர்போராட்டம்
» ஐ.ம.சு. முன்னணியின் தலைவர் பதவியை ஜனாதிபதி துறக்க வேண்டும்: உதய கம்மன்பில
» எதிர்க்கட்சித் தலைவர் பதவி எங்களுக்கே தரப்பட வேண்டும்! மஹிந்த தரப்பு தொடர்போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum