Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தமைக்கு மங்கள வரவேற்பு

Go down

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தமைக்கு மங்கள வரவேற்பு Empty ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தமைக்கு மங்கள வரவேற்பு

Post by oviya Fri Apr 03, 2015 12:29 pm

ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஓர் பயங்கரவாத அமைப்பாகத் தொடர்ச்சியாக நிரற்படுத்துவது தொடர்பாக அண்மையில் விடுத்த அறிவித்தலை வரவேற்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை- ஐரோப்பிய ஒன்றிய 19வது அமர்வு நேற்று வெளியுறவு அமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர,

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் தொடர்புகள், 1975ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டு சரியாக நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டவைகளாகும்.

இந்தக் கூட்டமானது 1995ஆம் ஆண்டில் பங்குடைமை மற்றும் அபிவிருத்தி மீதான ஒத்துழைப்பு உடன்படிக்கையானது நடைமுறைக்கு வந்த 20வது ஆண்டுடன் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றது.

இந்த மைல்கற்கள், கலந்துரையாடல் மற்றும் பங்குடைமை மூலமாக எமது ஈடுபாட்டையும் எமது ஒத்துழைப்பு அதிகரிப்பையும் பொறுப்பேற்பதற்கான சிறப்புப் பணியை மேற்கொள்வதற்கு எமக்கு ஊக்கமளிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இது ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஒத்துழைப்புக்கு அரசாங்கமானது வழங்குகின்ற பாரிய முக்கியத்துவத்தையும் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு மட்டத்தில் நேரடியானவைகளும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவைகளுமான உரையாடல் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றம் மூலமாக அக்கறையுடைய விடயங்களுக்கு நாம் வழங்குகின்ற முன்னுரிமையையும் காண்பிக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னர் மோதலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் உள்ளடக்கி இலங்கையின் சகல பாகங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 81.52 வீதத்தினர் தங்களுடைய வாக்குரிமையை, சனவரியில் நடாத்தப்பட்ட தேர்தலில் பயன்படுத்தியுள்ளமை தங்களுக்குத் தெரியும்.

இதுவே இந்த நாட்டின் வரலாற்றில் முன்னரெப்பொழுதும் இல்லாத மிகப் பெரிய அளவிலான வாக்காளர்களின் வாக்களிப்பாக இருந்தது.

இத்தேர்தலை பகிஷ்கரிக்குமாறு இந்த நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் அழைப்புக்கள் விடப்பட்டிருந்த போதிலும், இலங்கையின் மக்கள் தங்களுடைய வாக்குரிமையை நிலைநாட்டியுள்ளனர்.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் சகல சமூகத்தினர்களும் ஜனாதிபதி சிறிசேன அவர்களைத் தெரிவு செய்வதில் ஐக்கியப்பட்டிருந்தனர்.

எனவே, எமது வரலாற்றில் முதற் தடவையாக நாம் இந்நாட்டிலுள்ள சகல சமூகங்களின் உண்மையான பிரதிநிதியாகவுள்ள ஒரு சனாதிபதியை வைத்திருக்கின்றோம்.

இன, கலாசார மொழிப் பல்வகைமை ஆகியவற்றைக் கொண்ட புதிய ஐக்கிய இலங்கை ஒன்றில் இவையாவற்றிற்கும் மதிப்பளிக்கப்படும் என வாக்குறுதியளித்த ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கு மக்கள் ஒன்றாகத் திரண்டு வந்தமையும்கூட ஓர் முக்கியமான விடயமாகும்.

அவர்கள் பலமானவைகளும் சுதந்திரமானவைகளுமான சனநாயக நிறுவனங்களினதும், சுதந்திர கருத்துத் தெரிவித்தல், சட்டவாட்சி, சிறந்த ஆட்சி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல், பாதுகாப்பளித்தல் ஆகிய தங்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்துள்ளனர். அவ்வண்ணம் செய்வதில் அவர்கள் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக தனிப்பட்டவர்களின் உரிமைகளை விலக்களிப்புடன் மீறிய ஒரு ஆட்சியை நிராகரித்துள்ளனர்.

தெரிவு செய்யப்பட்டு ஒரு சில நாட்களுக்குள் இந்த அரசாங்கமானது, ஊடக சுதந்திரத்தை வழங்கியும், தடை செய்யப்பட்ட இணையத்தளங்களின் தடையை நீக்கியும் இந்நாட்டிற்கு விஜயம் வெளிநாட்டு ஊடக ஆளணியினர்கள் மீது வைக்கப்பட்ட தடைகளை நீக்கியும், பத்திரிகையாளர்கள் இந்த நாட்டின் சகல பாகங்களுக்கும் சுதந்திரமாகப் பிரயாணம் செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்தியும், நாடு கடந்த நிலையில் வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் சகல ஊடக ஆளணியினர்களை இலங்கைக்குத் திரும்பி வருமாறு கோரியும் உதவியுள்ளது.

மனித உரிமைகள் ஆர்வலர்களும், ஊடக ஆளணியினர்களும், சிவில் சமூகத் தொகுதியினர்களும், அச்சுறுத்துதல் அல்லது தொல்லைக்கு உட்படுத்தப்படுதல் ஆகிய விடயங்களிலிருந்து பயமின்றி தங்களுடைய வேலையை மேற்கொள்வதற்கு சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

இந்த அரசாங்கமானது, சுதந்திரம் பெற்ற பின்னர் 3 தசாப்தங்களுக்கு மேலாக இந்த நாட்டை பீடித்திருந்த துக்ககரமான மோதல் காரணமாக தங்களுடைய உயிர்களை இழந்த சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்த இந்நாட்டின் பிரசைகளுக்கு மரியாதை செலுத்தி சமாதானப் பிரகடனம் ஒன்றையும் கூட செய்துள்ளது.

இந்த நாடு அதன் சொந்தப் பிரசைகளின் இரத்தத்தைச் சிந்துவதன் மூலம் அதிர்ச்சியடையும் நிலைக்கு திரும்பவும் எப்பொழுதும் அனுமதிக்கப்படலாகாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பேற்பும் கூட செய்யப்பட்டுள்ளது.

பதவியேற்று சில நாட்களுக்குப் பின்னர் ஜனாதிபதியானவர் இந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முன்னைய இராணுவ ஆளுநர்களுக்குப் பதிலாக இரண்டு சிரேட்ட முன்னைய சிவில் உத்தியோகதர்களை நியமித்ததன் மூலம் பதிலீடு செய்துள்ளார்.

இது சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு நிறுத்தப்படுவதையும் உள்ளடக்கி இந்த மாகாணங்களில் சிவில் நிருவாகத்தைப் பலப்படுத்தும் நடைமுறையையும் உயர் பாதுகாப்பு வலயங்களின் மீளாய்வு மேற்கொள்ளப்படுவதையும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்திற்கான காணிகள் விடுவிக்கப்படுவதையும் தொடக்கி வைத்துள்ளது.

அமைச்சரவையானது ஏற்கனவே உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆயிரம் (1000) ஏக்கர் காணியைக் கண்டறிந்து அவற்றை விடுவிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் இக்காணிகளில் 425 ஏக்கர் காணிகளுக்கான உரித்துறுதிகள் மார்ச் 23ஆந் திகதியன்று அவற்றின் உரித்துடைய சொந்தக்காரர்களுக்குக் கையளிக்கப்பட்டது.

குறிப்பிடத்தக்க ஒரு நடவடிக்கையாக தேசிய கீதத்தை தமிழில் இசைக்கும் நடைமுறையானது இந்த வைபவத்தின் போது நடாத்தப்பட்ட விழாவில் இசைக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் சனாதிபதி அவர்களும் பிரதம அமைச்சர் அவர்களும் சமூகமளித்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையும் உள்ளடக்கி ஐக்கிய நாடுகள் நாட்டுக் குழுமமானது குடியேற்ற அமைச்சுடனும் பிற இயைபுள்ள நிறுவனங்களுடனும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான மீள் குடியேற்றத் திட்டங்களை தயாரிப்பதற்காக சுறுசுறுப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமானது இந்த முக்கியமான நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவி வழங்க வேண்டுமென நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நீக்கும் அரசியலமைப்பிற்கான 19வது திருத்தமானது மார்ச் மாதம் 24ஆந் திகதியன்று பாராளுமன்றத்தில் முன்வைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், இது ஏப்ரல் மாதம் 09ஆந் திகதியிலும் 10ஆந் திகதியிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன், நாம் இது வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இத்திருத்தமானது முரண்பாட்டுக்குரியதும், முக்கியமான ஆணைக்குழுக்களுக்கான சுதந்திர நியமனங்களை அகற்றியதும், நிறைவேற்று சனாதிபதியின் பதவி கால எல்லைகளை ஒழித்துள்ளதுமான 18வது திருத்தத்தை இரத்துச் செய்யும்.

19வது திருத்தமானது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை வெட்டிக் குறைத்து, அதிகாரங்களை பிரதம அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்திற்கும் கைமாற்றம் செய்யும். அது சுதந்திரமான நீதி, பொலிசு, அரசாங்க சேவை, தேர்தல்கள், ஊழல் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதற்கும் கூட ஏற்பாடு வழங்கும்.

குற்றவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் உதவியும், பாதுகாப்பும் வழங்குவதற்கான 5 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதிக்கப்பட்ட சட்டமூலமானது பெப்புருவரி 19ஆம் திகதியன்று பாராளுமன்றத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மாதம் முடிவதற்கு முன்னரும், பொதுத் தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னரும் அரசாங்கத்தின் நூறு நாட்களுக்குள் தகவல் உரிமைச் சட்டமும் கூட நிறைவேற்றப்படுமெனவும் நாம் முன்னாடியாகக் கருதுகிறோம்.

இந்த நடவடிக்கைகள் சிறந்த நல்லாட்சியும், சட்ட ஆட்சியும் நல்லிணக்க நடைமுறையின் வெற்றிக்கு முக்கியமானவைகளுமாகும். இது நிலைநாட்டப்படுவதற்குத் தேவைப்படுகின்ற நிறுவனங்களின் சுதந்திரத்தை பலப்படுத்தும்.

நம்பிக்கையையும், இசைவாக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கும், உட்சேர்க்கப்பட்ட மக்களின் தேவையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி அவர்கள் நல்லிணக்கம் பற்றிய விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவியுள்ளார்.

இது முன்னைய ஜனாதிபதியாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும். இப்பொறிமுறையானது மற்றும் வியடங்களுக்கிடையே தீர்வை உடனடியாக வேண்டுகின்ற பிரச்சினைகளைக் கண்டறிந்து நல்லிணக்கத்தை எய்துவதற்கான தீர்வுகளை சிபாரிசு செய்யும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்புகின்ற பல துறைகள் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமானது, இலங்கைக்கான தனியொரு ஆகப்பெரிய சந்தையாக இருப்பதுடன் நாம் வியாபாரம் மற்றும் பொருளாதார தொடர்புகளை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றோம்.

இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பப்படும் மீன் மற்றும் கடற்தொழில் ஏற்றுமதிகள் மீதான தடைவிதிப்புத் தொடர்பில் தீர்வு செய்யப்படாமலுள்ள விடயங்கள் பற்றி கவனத்திற் கொள்ளப்படுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற நடவடிக்கைகள் பற்றியும்கூட நான் அறிவேன்.

பல தசாப்தங்களாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக உள்ள இலங்கையானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கையைப் பற்றியும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஓர் பயங்கரவாத நிறுவனமாக நிரற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டைப் பற்றியும் பாராட்டுத் தெரிவிக்கின்றது.

நாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஓர் பயங்கரவாத அமைப்பாகத் தொடர்ச்சியாக நிரற்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் விடப்பட்டுள்ள அறிவித்தலையும் வரவேற்கின்றோம்.

இலங்கையானது, பயங்கரவாதத்தை அதன் சகல வடிவங்களிலும், தோற்றங்களிலும் கண்டிப்பதுடன் இத்தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனும், அங்கத்துவ நாடுகளுடனும் வேலை செய்யும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

நிலைபேறாக பயங்கரவாதத்தை ஒழித்தலுக்கு அதன் அறிகுறிகளை கையாளுவதற்கு அப்பாலும் செல்ல வேண்டுமென்பது பற்றியும் நாம் முக்கியமாக தெரிந்து வைத்திருக்கின்றோம்.

நாம் இலங்கையில் பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட வெறுப்பு, வன்செயல் ஆகியவற்றை ஏற்படுத்திய அநீதி, பாரபட்சம், தப்பெண்ணம் ஆகியவற்றிற்கான மூல காரணங்களை இலங்கையில் ஒழித்து தீர்வினை வழங்குவோம்.

இந்த அரசாங்கமானது கடந்த காலத்திலிருந்து விலகி எமது பல்கலாசார, பல்லின மற்றும் பல்மொழியியல் ஆகியவற்றைக் கொண்ட இலங்கையை சமத்துவம், நீதி, தகுதித்திறமை ஆகிய முதன்மை விடயங்களை சகலருக்கும் மெய்ம்மை உடையவைகளாக்கி எமது தொலைநோக்கை அடைவதற்கான ஆழமான பொறுப்பைக் கொண்டுள்ளது என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum