Top posting users this month
No user |
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து தீர்மானமில்லை: அஜித் பி பெரேரா
Page 1 of 1
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து தீர்மானமில்லை: அஜித் பி பெரேரா
புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இது உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதினால் மிகவும் நிதானமான முறையிலேயே கையாள வேண்டும் எனவும், இதற்கு பாராளுமன்றத்தின் ஆதரவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அரசாங்கம் கடந்த காலத்தில் பெருமளவிலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் அறிவித்திருந்தது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்ததாக தெரிவித்தே குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஐ.நா பேரவையின் பிரகடனமொன்றின் படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தனர்.
புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத அமைப்புக்கள் மற்றும் தனிப்படட நபர்களை இந்த பட்டியலிலிருந்து நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது என பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதினால் மிகவும் நிதானமான முறையிலேயே கையாள வேண்டும் எனவும், இதற்கு பாராளுமன்றத்தின் ஆதரவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அரசாங்கம் கடந்த காலத்தில் பெருமளவிலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் அறிவித்திருந்தது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்ததாக தெரிவித்தே குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஐ.நா பேரவையின் பிரகடனமொன்றின் படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தனர்.
புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத அமைப்புக்கள் மற்றும் தனிப்படட நபர்களை இந்த பட்டியலிலிருந்து நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது என பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum