Top posting users this month
No user |
மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் இருவர் பலி: வாழைச்சேனையில் சம்பவம்
Page 1 of 1
மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் இருவர் பலி: வாழைச்சேனையில் சம்பவம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரானில் நேற்று இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான வீதி சுங்கான்கேணியைச் சேர்ந்த, வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் 3 பிள்ளைகளின் தந்தையான செ.ஆதித்தன் (வயது 36) என்ற மாமா முறையானவரும், அவரது மருமகனான வி.ஜேப்பிரகாஸ் (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இருவரும் வந்தாறுமூலையில் உள்ள நண்பர் ஒருவரின் மருங்கை வீட்டு விழாவிற்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் கிரான் பிரதேசத்தில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை கொழும்பு வீதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டினை மீறி மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன் போது வாகனத்தில் சென்றவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சடலங்கள் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்பு சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பிரதான வீதி சுங்கான்கேணியைச் சேர்ந்த, வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் 3 பிள்ளைகளின் தந்தையான செ.ஆதித்தன் (வயது 36) என்ற மாமா முறையானவரும், அவரது மருமகனான வி.ஜேப்பிரகாஸ் (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இருவரும் வந்தாறுமூலையில் உள்ள நண்பர் ஒருவரின் மருங்கை வீட்டு விழாவிற்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் கிரான் பிரதேசத்தில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை கொழும்பு வீதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டினை மீறி மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன் போது வாகனத்தில் சென்றவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சடலங்கள் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்பு சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum