Top posting users this month
No user |
எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம.சு கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம்!- ஜே.வி.பி.
Page 1 of 1
எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம.சு கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம்!- ஜே.வி.பி.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தினேஸ் குணவர்தனவிற்கு வழங்குமாறு கூட்டமைப்பின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் கையெழுத்துக்களை திரட்டி வருகின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு எமது கட்சி எந்த வகையிலும் உடன்படாது.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு மற்றுமொரு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரை நியமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
எதிர்க்கட்சித் தலைவராக மெய்யாகவே எதிர்க்கட்சியில் இருக்கும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
நடைபெறும் விடயங்களை அவதானித்து அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சுதந்;திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதியினர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியின் பதவிகளை வகித்து வருகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க நேற்று சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தினேஸ் குணவர்தனவிற்கு வழங்குமாறு கூட்டமைப்பின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் கையெழுத்துக்களை திரட்டி வருகின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு எமது கட்சி எந்த வகையிலும் உடன்படாது.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு மற்றுமொரு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரை நியமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
எதிர்க்கட்சித் தலைவராக மெய்யாகவே எதிர்க்கட்சியில் இருக்கும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
நடைபெறும் விடயங்களை அவதானித்து அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சுதந்;திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதியினர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியின் பதவிகளை வகித்து வருகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க நேற்று சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum