Top posting users this month
No user |
Similar topics
இரத்தினபுரி கூட்டத்திற்கு சென்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவர்!– எஸ்.பி.நாவின்ன
Page 1 of 1
இரத்தினபுரி கூட்டத்திற்கு சென்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவர்!– எஸ்.பி.நாவின்ன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் நோக்கில் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்படுவர் என சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தால் அவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும்.
இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்திற்கு உடன்படாது கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், முதலமைச்சர், நகரசபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர் அல்லது தொகுதி அமைப்பாளர் எவரேனும் பங்கேற்றிருந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சித் தலைமை மற்றும் மத்திய செயற்குழுவிற்கு சவால் விடுக்க எவருக்கும் முடியாது. ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் ஆட இடமளிக்க முடியாது.
கட்சி என்றால் அதற்கென சில ஒழுக்க விதிகள் உண்டு. கட்சியின் அனைவரும் கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு இசைந்து செயற்பட வேண்டும்.
சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி அரசாங்கமொன்றை அமைக்கவே விரும்புகின்றோம்.
அரசியல் ரீதியாக அனாதைகளாக்கப்பட்ட சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீரழிக்க முயற்சிக்கின்றனர் என கொழும்பு ஊடகமொன்று இரத்தினபுரி கூட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தால் அவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும்.
இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்திற்கு உடன்படாது கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், முதலமைச்சர், நகரசபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர் அல்லது தொகுதி அமைப்பாளர் எவரேனும் பங்கேற்றிருந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சித் தலைமை மற்றும் மத்திய செயற்குழுவிற்கு சவால் விடுக்க எவருக்கும் முடியாது. ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் ஆட இடமளிக்க முடியாது.
கட்சி என்றால் அதற்கென சில ஒழுக்க விதிகள் உண்டு. கட்சியின் அனைவரும் கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு இசைந்து செயற்பட வேண்டும்.
சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி அரசாங்கமொன்றை அமைக்கவே விரும்புகின்றோம்.
அரசியல் ரீதியாக அனாதைகளாக்கப்பட்ட சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீரழிக்க முயற்சிக்கின்றனர் என கொழும்பு ஊடகமொன்று இரத்தினபுரி கூட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தாவை வெறுக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
» அமைச்சர் ராஜித மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
» அனுராதபுர கூட்டத்திற்கு 250க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மக்களை அழைத்துச் சென்ற ஐ.ம.சு.முன்னணி
» அமைச்சர் ராஜித மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
» அனுராதபுர கூட்டத்திற்கு 250க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மக்களை அழைத்துச் சென்ற ஐ.ம.சு.முன்னணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum