Top posting users this month
No user |
Similar topics
மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக் கோவையை ஜனாதிபதியிடம் கையளிக்க பெப்ரல் தீர்மானம்
Page 1 of 1
மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக் கோவையை ஜனாதிபதியிடம் கையளிக்க பெப்ரல் தீர்மானம்
ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை தோற்றுவிப்பதற்கான மார்ச் 12 பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
மார்ச் 12 பிரகடனம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அவ் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளுக்கு உள்வாங்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்க வேண்டிய பண்புகள், தகைமைகள், பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்த பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பிரகடனத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்குவார் எனவும் அவ் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்த பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு தேர்தல் சட்டமாக்கப்பட்டால் மாத்திரமே அது குறித்து கவனம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய முன்வைத்த கருத்து தொடர்பிலும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 12 பிரகடனத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த,
தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜாதிக ஹெல உறுமய சார்பில் அத்துரலிய ரத்ன தேரர், ஆகியோர் உள்ளிட்ட 15 அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் 12 பிரகடனம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அவ் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளுக்கு உள்வாங்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்க வேண்டிய பண்புகள், தகைமைகள், பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்த பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பிரகடனத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்குவார் எனவும் அவ் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்த பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு தேர்தல் சட்டமாக்கப்பட்டால் மாத்திரமே அது குறித்து கவனம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய முன்வைத்த கருத்து தொடர்பிலும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 12 பிரகடனத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த,
தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜாதிக ஹெல உறுமய சார்பில் அத்துரலிய ரத்ன தேரர், ஆகியோர் உள்ளிட்ட 15 அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதியிடம் பெப்ரல் கோரிக்கை
» மலையக மக்கள் முன்னணி ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்
» பெப்ரல் அமைப்பின் ஒழுக்க விதிகள் எனக்கு பொருத்தமற்றது!– தேர்தல் ஆணையாளர்
» மலையக மக்கள் முன்னணி ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்
» பெப்ரல் அமைப்பின் ஒழுக்க விதிகள் எனக்கு பொருத்தமற்றது!– தேர்தல் ஆணையாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum