Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவும்: இந்திய உயர்ஸ்தானிகர்

Go down

கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவும்: இந்திய உயர்ஸ்தானிகர் Empty கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவும்: இந்திய உயர்ஸ்தானிகர்

Post by oviya Tue Mar 24, 2015 11:58 am

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 50 ஆயிரம் வீடுகளை ஏற்கனவே இந்திய அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக இந்தியா தொடர்ந்து உதவும் என உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அடுத்த முறை இலங்கைக்கு விஜயம் செய்யும்போது நிச்சயம் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்தார்.

கல்லடியில் அமைந்துள்ள இந்திய அரசின் நிதி உதவியின்கீழ் நடாத்தப்படும் ஆடைத் தொழிற்சாலையில் இடம்பெற்ற கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் வைபவத்திலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பிலிருந்து 40 யுவதிகள் இந்தியாவில் அஹமதாபாத்தில் மூன்று மாதங்கள் பயிற்சியல் ஈடுபட்ட பின்னர், இங்குள்ள யுத்த்தால் பாதிக்கப்பட்ட 800 யுவதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த தையல் பயிற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்தநிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.















இந்திய தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்

இந்திய தூதுவர் எஸ்எச்.வை.கே.சிங்ஹா இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய தூதுவர் மட்டக்களப்பு,கல்லடியில் இந்திய உதவியுடன் செயற்பட்டுவரும் பெண்கள் சுயதொழில் பயிற்சி நிலையத்துக்கு விஜயம் செய்தார்.

பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கம் இந்தியாவின் சேவா அமைப்பின் உதவியுடன் இந்த பயிற்சியை மேற்கொண்டுவருகின்றது.

2011ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வருட பயிற்சியை நிறைவுசெய்த 25 பெண்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் இணைப்பாளர் ஏ.ரஜினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,தொழில்துறை திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் அருள்மொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த இந்திய தூதுவர்,

சேவா அமைப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பெண்கள் சுயதொழில் சங்கமானது தங்களது சுய உழைப்பில் இந்த பயிற்சியை முடித்ததில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த சேவா நிகழ்வானது 2016ஆம் ஆண்டு செப்டம்பர் வரையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் இந்திய உதவியுடன் நடாத்தப்படும் பயிற்சி நிலையங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum