Top posting users this month
No user |
முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேசிய அரசாங்கம் அவசியம்: ஜனாதிபதி
Page 1 of 1
முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேசிய அரசாங்கம் அவசியம்: ஜனாதிபதி
நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும்,குறிப்பாக நாட்டில் உள்ள இனப்பிரச்சினை உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கரு மிக முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றபட்டதும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும்.
அதேவேளை 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புகள் இருந்து வருகின்றன.
18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் மேலும் அதிருப்திக்கு உள்ளானது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே நான் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டேன்.
அது எனது பிரதான நோக்கம். ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த பின்னர், எந்த கட்சியும் கோரிக்கைகளையோ, அழுத்தங்களையோ கொடுக்காத நிலையில், 6 ஆண்டுகள் என்ற ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
நாடாளுமன்றத்தில் பதவிக்காலமும் 5 ஆண்டுகளாக குறைக்கப்படும். நான் அறிந்த வரையில் உலகில் எந்த நாட்டிலும் ஜனாதிபதி பதவிக்காலம் 6 ஆண்டுகள் இல்லை. பிற நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலமானது 5 வருடம் அல்லது 4 வருடங்களாகவே இருக்கும் எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றபட்டதும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும்.
அதேவேளை 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புகள் இருந்து வருகின்றன.
18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் மேலும் அதிருப்திக்கு உள்ளானது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே நான் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டேன்.
அது எனது பிரதான நோக்கம். ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த பின்னர், எந்த கட்சியும் கோரிக்கைகளையோ, அழுத்தங்களையோ கொடுக்காத நிலையில், 6 ஆண்டுகள் என்ற ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
நாடாளுமன்றத்தில் பதவிக்காலமும் 5 ஆண்டுகளாக குறைக்கப்படும். நான் அறிந்த வரையில் உலகில் எந்த நாட்டிலும் ஜனாதிபதி பதவிக்காலம் 6 ஆண்டுகள் இல்லை. பிற நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலமானது 5 வருடம் அல்லது 4 வருடங்களாகவே இருக்கும் எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum