Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பரணகம ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை: சுமந்திரன்

Go down

பரணகம ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை: சுமந்திரன்        Empty பரணகம ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை: சுமந்திரன்

Post by oviya Wed Mar 18, 2015 2:27 pm

புதிய அரசாங்கம் பிழையான பாதையில் பயணிக்குமானால், மஹிந்த ஆட்சிக்கு நடந்ததே இந்த அரசுக்கும் நடக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை.

பரணகம ஆணைக்குழுவின் சில அமர்வுகளில் நானும் பங்குபற்றினேன். இந்த ஆணைக்குழுவுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆனால், சாட்சிகள் பல்வேறு விதமான முறையில் அழைக்கப்படுகின்றனர்.

சாட்சிகளாக அழைக்கப்படுபவர்களிடம் ஆணைக்குழு தலையிட்டு கோழி, ஆடு தருகின்றோம் என்று கூறுகின்றது. "ஆடு, கோழி வேண்டாம். எமக்கு எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்'' என்று பல தாய்மார்கள் இதன்போது கூறினர்.

இதுபோன்ற சம்பவங்கள் இந்த ஆணைக்குழு விசாரணையில் இடம்பெற்றுள்ளன. இது ஒரு பாரிய விடயமாகும். இதனால் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறான நிலையில், இந்த ஆணைக்குழுவின் பணிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆணைக்குழு மட்டுமன்றி, அதற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள டெஸ்மன் டி சில்வா தலைமையிலான சர்வதேச ஆலோசனைக் குழு மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை.

எனவே, இப்படியான விசாரணை தொடரக்கூடாது. இவ்வாறான நிலையில், சர்வதேச விசாரணை அறிக்கையை பிற்போடுமாறும், உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை அரசு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து உறுதியளித்துள்ளது.

பரணகம ஆணைக்குழு மற்றும் அதன் விசாரணை நடவடிக்கைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்தத் தவறான முறைக்கு இடமளிக்க முடியாது.

எனவே, சர்வதேச மேற்பார்வையுடன் புதிய பொறிமுறை ஊடாக இந்த உள்ளக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, தவறான பாதையில் அரசு பயணிக்குமானால், மஹிந்த அரசுக்கு ஏற்பட்ட நிலைமையே இதற்கும் ஏற்படும்.

அதைக் காண நாம் விரும்பவில்லை. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை ஐக்கியப்படுத்தி பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum