Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமர் மோடியின் வருகை கிருஷ்ண தூதாகுமா?

Go down

பிரதமர் மோடியின் வருகை கிருஷ்ண தூதாகுமா? Empty பிரதமர் மோடியின் வருகை கிருஷ்ண தூதாகுமா?

Post by oviya Fri Mar 13, 2015 1:37 pm

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பு வந்துள்ளார்.
நாளை யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்குமான அவரின் விஜயம் அமைந்திருக்கும். இந்தியப் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு, மன்னாருக்கு வருகை தருகிறார் என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் இனம்புரியாத ஆர்வத்தை - அங்கலாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயத்திற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. தமிழ் மக்களைக் கொன்றொழித்த ஈழதேசத்திற்கு பிரதமர் மோடி போகக் கூடாதென்பதே அந்த எதிர்ப்புக்குக் காரணம்.

கூடவே, இலங்கை அரசின் அழைப்பை பிரதமர் மோடி நிராகரித்திருக்க வேண்டும்.

போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் நான் இலங்கைக்கு வருவது நல்லதல்ல என்று கூறி இலங்கை விஜயத்தை மோடி நிறுத்தியிருக்க வேண்டும் என்பது எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் ஆதங்கம்.

இந்த ஆதங்கத்தில் நியாயம் இருந்தாலும் வருகின்றவர் பிரதமர் மோடி. இங்கு இருக்கின்றவர் ஜனாதிபதி மைத்திரி என்ற வகையில் ஈழத்தமிழ் மக்கள் மோடியின் வருகையை கிருஷ்ண தூதாகக் கருதுகின்றனர்.

அதாவது பாரதப் போர் தொடங்குவதற்கு முன்னதாக கண்ண பரமாத்மா துரியோதனிடம் தூது செல்கிறார். தூது நோக்கம் சண்டையை நிறுத்துவது. சண்டையை நிறுத்துவது முடியாத காரியம் என்பது கிருஷ்ணனுக்கு அச்சொட்டாகத் தெரியும்.

அப்படியாயின் துரியோதனிடம் கண்ணன் தூது சென்றது எதற்காக? என்ற கேள்வி எழும். பாரதப் போர் தவிர்க்க முடியாததென்பது தெரிந்த விடயமாகினும் போர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவும் தூது சென்று போரை நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் யுத்தத்தில் உறுதியாகப் போரிட முடியாது போகும். அதேநேரம் போரில் ஏற்படுகின்ற அழிவுகளை ஜீரணிப்பதற்கும் போர் தொடங்குவற்கு முன்னதாக சமாதானத் தூது அவசியம் என்ற வகையிலேயே கிருஷ்ண தூது நடந்தது.

கிருஷ்ணதூது சமாதானத்திற்காயினும் பாரத மக்கள் கிருஷ்ண தூதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். தர்மம் பாதுகாக்கப்படும் என்பதே அந்த நம்பிக்கை. மக்களின் நம்பிக்கை யுத்தத்தின் ஊடாக நிறைவேற்றப்படுகிறது.

சமாதானம் சாத்தியமாகவில்லை எனும் போது, யுத்தத்தினூடாகவேனும் தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முடிபு அங்கு எடுக்கப்படுகின்றது.

இது போலத்தான் இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயமும் அமைந்திருக்கின்றது. இலங்கைக்கு வருகை தருகின்ற பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்கும் வருகை தருகிறார்.

எனவே, தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவதில் மோடியின் இலங்கை விஜயம் பெருந்துணை புரியுமென நம்புகின்றோம். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவது மோடியின் தலையாய கடமை.

இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங்கும் இலங்கையில் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்­சவும் இருந்து, மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக இருந்தால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தமிழர் தாயகத்தில் நடக்கும்.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வருபவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடி ஏதாவது எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் நிறையவே உண்டு.

இந்த நம்பிக்கை வீண் போகாமல் இருப்பதை மோடி உறுதி செய்ய வேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum