Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோத்தபாயவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுச்சபைக்கு இருக்கும் அதிகாரம் என்ன?: கேள்வி எழுப்பும் தேசிய சுதந்திர முன்னணி

Go down

கோத்தபாயவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுச்சபைக்கு இருக்கும் அதிகாரம் என்ன?: கேள்வி எழுப்பும் தேசிய சுதந்திர முன்னணி Empty கோத்தபாயவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுச்சபைக்கு இருக்கும் அதிகாரம் என்ன?: கேள்வி எழுப்பும் தேசிய சுதந்திர முன்னணி

Post by oviya Thu Mar 12, 2015 1:09 pm

நாட்டின் இன்றைய அரசாங்கம், போரை வென்ற தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வது சம்பந்தமாக தேசிய நிறைவேற்றுச் சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இப்படியான கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்பந்தப்பட்ட விடயங்களை பேசவும் தீர்மானங்களை எடுக்கவும் தேசிய நிறைவேற்று சபைக்கு இருக்கு அதிகாரம் என்ன?.

முன்னாள் கடற்படை பேச்சாளர் முதல் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட வரையான அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கெலம் மெக்ரே முக்கிய பிரமுகர்கள் வரும் வழியில் நாட்டுக்குள் வந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான விவரணப் படத்தை உருவாக்க அனுமதி வழங்கப்படும் போதும் புலிகளின் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படும் நிலையிலும் போரை வென்ற தலைவர்களை கைது செய்ய திட்டமிடுவது கவலைக்குரியது.

இலங்கை மத்திய வங்கியில் 270 கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி நடந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அனுரகுமார போன்றவர்கள் தமது சகாக்களை பயன்படுத்தி இது சம்பந்தமாக ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். எனினும் தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிக்கும் அனுரகுமார திஸாநாயக்க அங்கு இது பற்றி ஏன் கேள்விகளை எழுப்புவதில்லை எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum