Top posting users this month
No user |
ஆகாயத்தில் சிறுமியின் கன்னத்தை தடவிய இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1
ஆகாயத்தில் சிறுமியின் கன்னத்தை தடவிய இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
விமான பயணத்தின் போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் லண்டன்வாழ் இந்தியருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கிழக்கு மிட்லண்ட் பகுதியில் லைசெஸ்டர் நகரில் வசித்து வரும் மன்ஜித் சிங் சித்து (38) என்ற இந்தியர் கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பின்னர் அவர் சுற்றுலா முடிந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டபோது, அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது.
இதையடுத்து, சித்துவின் இருக்கைக்கு பின்புற இருக்கைகளில் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் ஆசிரியருடன் அமர்ந்திருந்துள்ளனர்.
அப்போது அவர், பின் இருக்கையில் இருந்த 14 வயது பள்ளி சிறுமியின் முடியை கோதுவது, கன்னம் மற்றும் கழுத்தை வருடுவது என தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், பாங்காங்கில் விலைமாதுக்களுடனான தனது அனுபவத்தை அச்சிறுமியிடம் விவரித்ததாகவும், அந்த சிறுமியிடம் உறவு வைத்துக்கொள்ளலாமா என அவர் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த சிறுமி தனது ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆசிரியர் விமானியின் கவனத்திற்குக் இதனை கொண்டு சென்றதால் இது தொடர்பாக லண்டன் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் லண்டன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், மன்ஜித் சிங் சித்து விமானநிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், சித்துவுக்கு நீதிமன்றம் 4 மாத சிறைத் தண்டனை வழங்கியதோடு, பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் 7 ஆண்டுகள் வரை கையெழுத்திட வேண்டும் எனவும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தின் கிழக்கு மிட்லண்ட் பகுதியில் லைசெஸ்டர் நகரில் வசித்து வரும் மன்ஜித் சிங் சித்து (38) என்ற இந்தியர் கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பின்னர் அவர் சுற்றுலா முடிந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டபோது, அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது.
இதையடுத்து, சித்துவின் இருக்கைக்கு பின்புற இருக்கைகளில் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் ஆசிரியருடன் அமர்ந்திருந்துள்ளனர்.
அப்போது அவர், பின் இருக்கையில் இருந்த 14 வயது பள்ளி சிறுமியின் முடியை கோதுவது, கன்னம் மற்றும் கழுத்தை வருடுவது என தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், பாங்காங்கில் விலைமாதுக்களுடனான தனது அனுபவத்தை அச்சிறுமியிடம் விவரித்ததாகவும், அந்த சிறுமியிடம் உறவு வைத்துக்கொள்ளலாமா என அவர் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த சிறுமி தனது ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆசிரியர் விமானியின் கவனத்திற்குக் இதனை கொண்டு சென்றதால் இது தொடர்பாக லண்டன் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் லண்டன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், மன்ஜித் சிங் சித்து விமானநிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், சித்துவுக்கு நீதிமன்றம் 4 மாத சிறைத் தண்டனை வழங்கியதோடு, பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் 7 ஆண்டுகள் வரை கையெழுத்திட வேண்டும் எனவும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum