Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சிறுநீரக நோய் தொற்று அதிகரிப்பு: இலங்கைக்கு உதவும் சீனா

Go down

சிறுநீரக நோய் தொற்று அதிகரிப்பு: இலங்கைக்கு உதவும் சீனா Empty சிறுநீரக நோய் தொற்று அதிகரிப்பு: இலங்கைக்கு உதவும் சீனா

Post by oviya Sun Mar 08, 2015 12:16 pm

இலங்கையில் தற்பொழுது அதிகரித்து வரும் சிறுநீரக நோய்த் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, சீனாவின் பிரபல விஞ்ஞானியொருவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஷியாங்லியங் உறுதியளித்துள்ளார்.
நேற்று முன்தினம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்குமிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஷியாங்லியங்குக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே, அமைச்சர் ஹக்கீமிடம் சீனத்தூதுவர் மேற்கண்ட உறுதியினை வழங்கியுள்ளார்.

இலங்கையின் வடமத்திய மற்றும் வடகிழக்கு உட்பட்ட பிரதேசங்களில் சிறுநீரக நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாகவும், இரசாயன பொருட்கள், செயற்கைப் பசளை என்பன நிலக்கீழ் நீரில் கலப்பதன் காரணமாகவே, சிறுநீரக நோய் அதிகளவில் ஏற்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த நோயினைக் கட்டுப்படுத்துவதற்கும், குணப்படுத்துவதற்கும் சீனா போன்ற நாடுகளின் நவீன தொழிநுட்ப, மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் சீனத் தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோளொன்றினை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, சிறுநீரக நோயாளர்கள் அதிகமுள்ள பின்தங்கிய கிராமப் புறங்களில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காக, தற்பொழுது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘ஆர்ஓ’ எனப்படும் ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் எனும் செயற்பாடு பற்றியும் இதன்போது அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த மேற்படி வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட சீனத் தூதுவர் யீ ஷியாங்லியங், இது தொடர்பில் இலங்கைக்கு சீனா உதவும் என உறுதியளித்துள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு நகரினைத் தெரிவு செய்து, அதனை சீனாவின் அபிவிருத்தி அடைந்த நகரோடு இணைத்து செயலாற்றுவதற்கான ஓர் ஏற்பாட்டினைச் செய்யுமாறு, அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோளொன்றினை சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளார்.

அமைச்சரின் இந்த வேண்டுகோளினை, தமது நாடு சாதகமாக பரிசீலிக்குமென்று இதன்போது சீனத் தூதுவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum