Top posting users this month
No user |
அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றிற்கும் ஆலோசனை வழங்க ராஜ்யசபை
Page 1 of 1
அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றிற்கும் ஆலோசனை வழங்க ராஜ்யசபை
அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஆலோசனை வழங்குவதற்கான ராஜ்யசபை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
சேதுவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் கீழ் ராஜ்யசபையை உருவாக்குவது தொடர்பிலான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது தேர்தலின் பின்னர் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையிலேயே செயற்படுவார் எனவும்,
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தல், நீதி, ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், உள்ளிட்டவைகளை ஜனாதிபதியே மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி நினைக்கும் நேரத்தில் அமைச்சரவையை ஒன்றுகூட்டுவதற்கான அதிகாரம் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஆலோசனை வழங்குவதற்கான ராஜ்யசபையை அமைத்தல் புதிய யோசனை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் காணப்படும் விருப்பு வாக்கு தெரிவு முறையை இரத்து செய்து தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை இணைத்து புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படவுள்ளது.
இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பல யோசனைகளை முன்வைத்துள்ளார் எனவும், எதிர்வரும் 10ம் திகதி அவருடன் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சேதுவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் கீழ் ராஜ்யசபையை உருவாக்குவது தொடர்பிலான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது தேர்தலின் பின்னர் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையிலேயே செயற்படுவார் எனவும்,
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தல், நீதி, ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், உள்ளிட்டவைகளை ஜனாதிபதியே மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி நினைக்கும் நேரத்தில் அமைச்சரவையை ஒன்றுகூட்டுவதற்கான அதிகாரம் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஆலோசனை வழங்குவதற்கான ராஜ்யசபையை அமைத்தல் புதிய யோசனை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் காணப்படும் விருப்பு வாக்கு தெரிவு முறையை இரத்து செய்து தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை இணைத்து புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படவுள்ளது.
இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பல யோசனைகளை முன்வைத்துள்ளார் எனவும், எதிர்வரும் 10ம் திகதி அவருடன் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum