Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமர் மோடியின் வடக்கு விஜயம் தமிழர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம்

Go down

பிரதமர் மோடியின் வடக்கு விஜயம் தமிழர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் Empty பிரதமர் மோடியின் வடக்கு விஜயம் தமிழர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம்

Post by oviya Sat Mar 07, 2015 11:52 am

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் அதேவேளை யாழ்ப்பாணத்திற்கும் வருகை தரவுள்ளார். பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
பொதுவில் இந்தியப் பிரதமர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தாலும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கான அவர்களின் விஜயம் மட்டுப்பாடாகவே இருந்தது. அந்த வகையில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம், மன்னார் விஜயம் வரலாற்றுப் பதிவுக்குரியது.

2009ம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த பேரழிவுகளால் தமிழ் மக்கள் தாங்கொணாத் துன்பத்தை தாங்கி நிற்கும் வேளையில் பிரதமர் மோடியின் வடக்கு விஜயம் தமிழர்களுக்கு நன்மை தருவதாக அமைவதற்கு ஏற்றால் போல், தமிழ் அரசியல் தலைமைகள் வியூகம் அமைக்க வேண்டும்.

இந்தியப் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எத்தகைய விடயங்களை அவருடன் பேசுவது என்பதில் தெளிவான வரையறைகள் அவசியமாகும்.

எழுந்தமானமாகக் கதைப்பது, முக்கியமான விடயங்களுடன் முக்கியத்துவம் அற்ற விடயங்களையும் உள்ளடக்குவது என்பன தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, அந்தத் தீர்வு எந்த வகையில் அமையவேண்டும்; அதற்கான காலவரையறை என்பன பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாக அமையும். எதுவாயினும் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயத்தை பெறுமதி உள்ளதாக்குவது எங்களின் கைளில் உள்ளது.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு பெறுமதி வாய்ந்த சந்தர்ப்பமாக பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயத்தை ஆக்கிக் கொள்வது தமிழ் அரசியல் தலைமைகளினதும் புத்திஜீவிகளினதும் கடமையாகும்.

இந்தியப் பொதுத் தேர்தல் காலத்தில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பிரதமர் மோடி; பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனத் தெளிவுபடக் கூறியிருந்தார்.

தமிழகத்தில் அவர் கூறியதை யாழ்ப்பாணத்தில் ஞாபகப்படுத்துவதும் மோடி ஆற்றிய அந்த உரையில் ஈழத்தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் எடுத்துரைப்பது பொருத்தமானதாகும்.

இந்தியாவில் பிரதமர் மோடி; இலங்கையில் ஜனாதிபதி மைத்திரி என்ற இரு நாட்டு ஆட்சித் தலைமைகளிடமும் நல்லதொரு ஒற்றுமையும் புரிந்துணர்வும் உள்ளது.

இந்த ஒற்றுமையும் புரிந்துணர்வும் கூடியவேளையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடியிடம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவுமாறு நாம் வலியுறுத்த வேண்டும்.

அந்த வலியுறுத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்வு காண்பதற்கான உத்தரவாதத்தை மோடியிடம் இருந்து பெற்றுக் கொள்வதாக இருக்கும்.

எது எப்படியாக இருப்பினும் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயம் தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினையை எடுத்துக் கூறுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம். அச்சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்துவோம்.

இதற்காக எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஓரணியில் திரண்டு பிரதமர் மோடியிடம் ஒன்றாகக் குரல் கொடுப்போம். எங்கள் உரிமையைப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்போம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum