Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழீழ மண்ணிற்காய் வாழ்நாளை அர்ப்பணித்த அமரர் கெங்காதரனுக்கு மாமனிதர் விருது

Go down

தமிழீழ மண்ணிற்காய் வாழ்நாளை அர்ப்பணித்த அமரர் கெங்காதரனுக்கு மாமனிதர் விருது  Empty தமிழீழ மண்ணிற்காய் வாழ்நாளை அர்ப்பணித்த அமரர் கெங்காதரனுக்கு மாமனிதர் விருது

Post by oviya Fri Mar 06, 2015 1:24 pm

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் ஒருவரை எமது தேசம் இன்று இழந்துவிட்டது என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழீழ மண்ணில் மனித உயிர்காக்கும் தொண்டுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேச ஒளி ஒன்று அணைந்துவிட்டது.

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் ஒருவரை எமது தேசம் இன்று இழந்துவிட்டது. வைத்திய கலாநிதி திரு. தி.கெங்காதரன் அவர்கள் தமிழீழ மருத்துவத் துறையின் வளர்ச்சிக்காகவும் நலன்களுக்காகவும் அரும்பாடுபட்டவர்.

தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் விடுதலை பெற்று, இன்னல்கள் நீங்கி, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழவேண்டுமெனத் தாகம் கொண்டவர். கனிவான புன்னகையோடு அனைவரோடும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்ளும் ஓர் உயரிய பண்பாளர்.

இவர் அந்நிய ஆக்கிரமிப்புப் போருக்குள் சதா சிக்கித்தவித்த எமது மக்களைக் காப்பதற்காக இரவு பகலாக அயராது பாடுபட்டார்.

உணவு, மருந்து உள்ளிட்ட கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட வன்னிப் பெருநிலப்பரப்பில் வசித்துவந்த நான்கரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவக் குறைபாடுகளுக்கு மத்தியிலும் மிகவும் சிறப்பாகத் தனது பணியை ஆற்றியிருந்தார்.

மிகவும் நெருக்கடி வாய்ந்த அந்தக் காலப்பகுதியில் மகப்பேற்று நிபுணர்களோ, காது -மூக்கு -தொண்டை நிபுணர்களோ இல்லாதநிலையில், எமது மண்ணில் அந்தத் துறைக்குத் தனி ஒரு நிபுணராக எமது மக்களுக்காக ஊதியம் பெறாது சேவையாற்றிய ஒரு தலைசிறந்த உன்னத மனிதராவார்.

ஓய்வுபெறும் வயதினைக் கடந்தும் ஒன்றரைத் தசாப்த காலமாக ஓய்வற்ற மருத்துவ சேவையை எமது மக்களுக்கும் போராளிகளுக்கும் வழங்கிய ஓர் உயரிய நாட்டுப்பற்றாளர் ஆவார்.

வன்னி மண்ணில் 2009 வரை ஐந்து இலட்சம் வரையான நோயாளர்களுக்குச் சிகிச்சை செய்தும் பல ஆயிரக்கணக்கானோருக்கு சத்திர சிகிச்சைகள் செய்தும் எமது மக்களுக்குப் பெருந் தொண்டாற்றிய ஒரு சாதனையாளர். மருத்துவத் துறையில் அவரது 50 ஆண்டுகால அயராத சேவையையும் 80 ஆவது வயதின் நிறைவையும் பாராட்டி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் விருதுவழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

தமிழீழ மருத்துவத் துறைக்கு அவர் வழங்கிய ஆலோசனைகள், அனுபவங்கள் யாவும் எமது விடுதலைப் போராட்டத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்தன.

இளம் மருத்துவர்களுக்கு எப்போதும் இவர் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்தார். அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தார். இவர் கற்பித்து, பயிற்சியளித்து பல வைத்திய கலாநிதிகளையும் வைத்திய மாணவர்களையும் அடுத்த தலைமுறைக்கும் தன் பணி தொடர உருவாக்கிவிட்டுள்ளார்.

கடும் உழைப்பாலும் செயலினாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது. வைத்திய கலாநிதி திரு. தி.கெங்காதரன் அவர்களின் இனப்பற்று, விடுதலைப் பற்று ஆகியவற்றுக்கு மதிப்பளித்தும் எமது தேசத்துக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பை கௌரவித்தும் “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய நாம் பெருமையடைகிறோம்.

மனித உயிர்காக்கும் அற்புத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum