Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்: மறுக்கும் கடற்படை

Go down

தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்: மறுக்கும் கடற்படை Empty தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்: மறுக்கும் கடற்படை

Post by oviya Thu Mar 05, 2015 1:30 pm

தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை மீனவர்கள் சி்றைப்பிடித்து வைத்துள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராமநாதபுரம் கோடியகரையில் இருந்து கடந்த 1 ஆம் திகதி மாலை கடலுக்குச் சென்ற மீனவர்களையே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து வைத்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மீனவர்கள் கோடியகரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தியதுடன் பணம் கொடுக்காவிட்டால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர் எனவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து படகு உரிமையாளர் அந்த ஊடகத்திற்கு தெரிவிக்கையில், கடந்த 1 ஆம் திகதி 7 மீனவர்களுடன் எனது நாட்டுப்படகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. வழக்கமாக 3 நாளில் படகு கரை திரும்பி விடும். அதன்படி நேற்று மாலை படகு திரும்ப வேண்டும். ஆனால் எந்தவித தகவலும் இல்லாததால் நாட்டுப்படகில் உள்ள செல்போனை தொடர்பு கொண்டேன். அப்போது சிங்கள மொழியில், ‘தொடர்பு கொள்ள முடியாது’ என்ற வாசகம் கேட்டது என தெரிவித்தார்.

படகில் உள்ள மீனவர் ஒருவர் படகு உரிமையாளரான மைக்கேலை தொடர்பு கொண்டு தெரிவித்த தகவலின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என மேலும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இது குறித்து, இந்திய தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் யாழ். நீரியல் வளத்துறைத் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், கடற்றொழில் சங்கங்களும் சம்பவம் குறித்து தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளன.

இது குறித்து கடற்படைக்கு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் அறிவித்துள்ளதாகவும் திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum