Top posting users this month
No user |
தங்க காசு...லட்சக்கணக்கான பணம்! மக்களை ஏமாற்றிய பிரபல நடன நடிகர்- பெண் கைது
Page 1 of 1
தங்க காசு...லட்சக்கணக்கான பணம்! மக்களை ஏமாற்றிய பிரபல நடன நடிகர்- பெண் கைது
பொதுமக்களிடம் முதலீடு பெற்று ரூ.46 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக நடன நடிகர் ஒருவர், பெண் தொழில் அதிபருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு பிருந்தாவன் நகரில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் நர்மதா(34) என்ற பெண் தொழில் அதிபர்.
இந்நிலையில் இவரது நிறுவனம் மீது சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவரும், மேலும் 5 பேரும் புகார்மனுக்கள் கொடுத்துள்ளனர்.
அந்த மனுக்களில், தொழில் அதிபர் நர்மதா நடத்தி வரும் நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களில் நாங்களும் இருந்தோம்.
அவர் எங்களுக்கு கைப்பேசியில் வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தி என்று வாடிக்கையாளர் முதலீடு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1.80 லட்சமாக திருப்பித்தரப்படும் என்றும், அத்துடன் தங்க காசு பரிசாக கிடைக்கும் என்றும், ஒரு ஆண்டு காரில் இலவச பயணமும் செல்லலாம் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து அவரை நம்பி, நாங்கள் ரூ.64 லட்சம் வரை முதலீடு செய்தோம். அவர் சொன்னபடி சிலருக்கு தங்க காசு பரிசாக கொடுத்ததால் மேலும் நூற்றுக்கணக்கான பேர், முதலீடு செய்தனர்.
ஒரு சிலருக்கு முதலீட்டு பணத்துடன் கவர்ச்சி அறிவிப்பில் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுத்ததோடு பலருக்கு வங்கி காசோலை கொடுத்தார்.
பணம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆனால் வங்கி காசோலைகள் நர்மதாவின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பின.
எனவே நர்மதா மீதும், அவரிடம் மேலாளராக வேலை பார்க்கும் பரத்குமார்(24) மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், நர்மதா மீதும், அவரது நிறுவன மேலாளர் பரத்குமார் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நர்மதாவும், பரத்குமாரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் நர்மதா பற்றி திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
திருமணமான நர்மதா கணவரை பிரிந்து தற்போது சென்னை முகலிவாக்கத்தில் சொகுசாக வாழ்கிறார் என்றும் அவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம், முக்கூர் கிராமம் எனவும் தெரியவந்துள்ளது.
நர்மதாவுடன் கைதான அவரது மேலாளர் பரத்குமார், நடன நடிகராக உள்ளதாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் முதல் பரிசை பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது நர்மதாவுடன், பரத்குமாரும் நீதிமன்ற காவலில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு பிருந்தாவன் நகரில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் நர்மதா(34) என்ற பெண் தொழில் அதிபர்.
இந்நிலையில் இவரது நிறுவனம் மீது சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவரும், மேலும் 5 பேரும் புகார்மனுக்கள் கொடுத்துள்ளனர்.
அந்த மனுக்களில், தொழில் அதிபர் நர்மதா நடத்தி வரும் நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களில் நாங்களும் இருந்தோம்.
அவர் எங்களுக்கு கைப்பேசியில் வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தி என்று வாடிக்கையாளர் முதலீடு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1.80 லட்சமாக திருப்பித்தரப்படும் என்றும், அத்துடன் தங்க காசு பரிசாக கிடைக்கும் என்றும், ஒரு ஆண்டு காரில் இலவச பயணமும் செல்லலாம் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து அவரை நம்பி, நாங்கள் ரூ.64 லட்சம் வரை முதலீடு செய்தோம். அவர் சொன்னபடி சிலருக்கு தங்க காசு பரிசாக கொடுத்ததால் மேலும் நூற்றுக்கணக்கான பேர், முதலீடு செய்தனர்.
ஒரு சிலருக்கு முதலீட்டு பணத்துடன் கவர்ச்சி அறிவிப்பில் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுத்ததோடு பலருக்கு வங்கி காசோலை கொடுத்தார்.
பணம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆனால் வங்கி காசோலைகள் நர்மதாவின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பின.
எனவே நர்மதா மீதும், அவரிடம் மேலாளராக வேலை பார்க்கும் பரத்குமார்(24) மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், நர்மதா மீதும், அவரது நிறுவன மேலாளர் பரத்குமார் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நர்மதாவும், பரத்குமாரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் நர்மதா பற்றி திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
திருமணமான நர்மதா கணவரை பிரிந்து தற்போது சென்னை முகலிவாக்கத்தில் சொகுசாக வாழ்கிறார் என்றும் அவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம், முக்கூர் கிராமம் எனவும் தெரியவந்துள்ளது.
நர்மதாவுடன் கைதான அவரது மேலாளர் பரத்குமார், நடன நடிகராக உள்ளதாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் முதல் பரிசை பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது நர்மதாவுடன், பரத்குமாரும் நீதிமன்ற காவலில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum