Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீள்குடியேற்ற அமைச்சர் கடுமையாகப் பாடுபடவேண்டும்

Go down

மீள்குடியேற்ற அமைச்சர் கடுமையாகப் பாடுபடவேண்டும் Empty மீள்குடியேற்ற அமைச்சர் கடுமையாகப் பாடுபடவேண்டும்

Post by oviya Wed Mar 04, 2015 1:27 pm

தமிழர்களின் தாயகத்தில் படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
எனினும் மகிந்த ராஜபக்ச­வின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படவில்லை. இதனால் தமிழ் மக்கள், யுத்தம் முடிந்தும் தங்கள் வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாமல் போயிற்று.

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது மீள்குடியமர்வு என்ற விடயம் வலுக்கத் தொடங்கியது.

மைத்திரியின் ஆட்சியில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

இணக்கம் காணப்பட்ட இந்த விடயத்தை செய்விக்கின்ற முக்கியமான பொறுப்பு தமிழ் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இங்கு நோக்குதற்குரியது.

எனவே மீள்குடியேற்றம் என்ற முக்கியமான பணியை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் மிக விரைவாகச் செய்து முடிக்க வேண்டும்.

படைத்தரப்பின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள இடங்களில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் எடுக்கின்ற விரைவான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் இழந்த தங்கள் வாழ்விடங்களை மீளப்பெறுவதற்கு வழி சமைக்கும்.

அதேநேரம் மீள்குடியேற்ற அமைச்சர், மீள்குடியமர்வு சார் விடயங்களில் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் அடையும் போது அதற்கான காரணங்களை பகிரங்கப்படுத்துவதும் அவரின் கடமையாகும்.

ஏனெனில் மீள்குடியேற்ற அமைச்சுப் பொறுப்பை தமிழ் அமைச்சரிடம் வழங்கி விட்டு வேறு வழிகளில் மீள்குடியேற்றத்திற்குத் தடைசெய்ய முடியும்.

இவ்வாறு தடை செய்யும் அதேநேரம், மீள்குடியேற்ற அமைச்சை தமிழர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளோம். எனவே அவர் தமிழ்மக்களின் மீள்குடியமர்வில் கவனம் செலுத்துவார் என அரசு கூறிக் கொள்ளும்.

இவ்வாறாக தமிழ் மக்களை மீள்குடியமர்த்துகின்ற பொறுப்பை தமிழ் அமைச்சரிடம் கொடுத்திருப்பதன் மூலம் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தில் இருந்து இலங்கை அரசு தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ஆகையால் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள், படைத்தரப்பால் விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலங்களில், உரியவர்களை மீளக்குடியமர்த்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

இந்தப் பணியை விரைவுபடுத்துவதற்கு வசதியாக, அமைச்சர் சுவாமிநாதன் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் அலுவலகத்தை திறந்து மீள்குடியமரும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

இப்பணியைச் செய்வதற்காக அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து களத்தில் இறங்கி, மீள்குடியேற்றப் பணியைக் கவனிக்கவேண்டும்.

இதைச் செய்வதில் காலதாமதம் ஏற்படுமாயின் அரசு தப்பித்துக் கொள்ளும்.

ஆனால் தமிழன் தமிழனுக்கு உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து நிற்கும் என்பதால், தமிழனுக்குக் கிடைத்த மீள்குடியேற்ற அமைச்சுப் பதவி தமிழனுக்குப் பேருதவி புரிந்தது என்பதாக நிலைமையை மாற்ற அமைச்சர் சுவாமிநாதன் முன்வரவேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum