Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் தாமதிக்க வேண்டாம்: பிரித்தானியா வலியுறுத்து

Go down

அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் தாமதிக்க வேண்டாம்: பிரித்தானியா வலியுறுத்து Empty அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் தாமதிக்க வேண்டாம்: பிரித்தானியா வலியுறுத்து

Post by oviya Tue Mar 03, 2015 1:25 pm

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை செப்டெம்பருக்கு பின்னரும் காலம் தாமதிக்க கூடாது என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய ஐ.நா மனித உரிமை பிரதிநிதிகளினால் இலங்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இம்மாதம் அறிக்கை சமர்பிக்கப்படவிருந்தது.

எனினும் இலங்கை குறித்ததான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிப்பதற்கும், அது குறித்த விவாதத்தையும் ஒத்திவைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த பரிந்துரைக்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணை அறிக்கை வெளியிடுவதை செப்டெம்பர் மாதத்திற்கு பின்னரும் தாமதிக்க கூடாது எனும் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாட்டை பிரித்தானியா ஏற்றுக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது! இலங்கையை மறைமுகமாக சாடிய ஐ.நா. பேரவை ஆணையாளர்

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் தெரிவித்தார்.

ஜெனீவாவில் ஆரம்பமான 28வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.



ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்களை உலக நாடுகளின் பிரதிநிதிகள் கவனத்தில் எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தச் செய்வதன் மூலமே உண்மையான பலன் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum