Top posting users this month
No user |
கேரளாவை தாக்கியது எரிகல் தான்: விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
கேரளாவை தாக்கியது எரிகல் தான்: விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல் (வீடியோ இணைப்பு)
கேரள மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் வானத்தில் திடீரென தோன்றிய மிகப்பெரிய எரிகோளம், எரிகல்தான் என்று விஞ்ஞானிகள் முதற்கட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் நெருப்புக்கோளம் தோன்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பெரும் பீதி ஏற்பட்ட நிலையில், இந்த நெருப்புக் கோளம் எர்ணாகுளம் மாவட்டம் கரியமல்லூர் என்ற கிராமத்தின் திறந்தவெளி பகுதியில் விழுந்தது.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற, மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் அங்கு கிடைத்த பொருட்களை கைப்பற்றி ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்த ஆணையத்தின் விஞ்ஞானி குரியகோஸ் கூறுகையில், எங்களது முதல் கட்ட ஆய்வில் கரியமல்லூர் கிராமத்தில் விழுந்தது, எரிகல் என்பது தெரிய வந்துள்ளது.
அந்த இடத்தில் நாங்கள் சேகரித்த பொருட்கள் மிகவும் சிறிய அளவில் இருந்தாலும் அதிக எடையைக் கொண்டிருந்தன.
இவற்றில் இரும்பும், நிக்கலும் அதிக அளவில் கலந்து காணப்படுகிறது. இது அதிக ஈர்ப்பு விசையுடன் பூமியில் விழுந்ததால்தான் பலத்த அதிர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும், இது அபூர்வ வகை எரிகல் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் நெருப்புக்கோளம் தோன்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பெரும் பீதி ஏற்பட்ட நிலையில், இந்த நெருப்புக் கோளம் எர்ணாகுளம் மாவட்டம் கரியமல்லூர் என்ற கிராமத்தின் திறந்தவெளி பகுதியில் விழுந்தது.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற, மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் அங்கு கிடைத்த பொருட்களை கைப்பற்றி ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்த ஆணையத்தின் விஞ்ஞானி குரியகோஸ் கூறுகையில், எங்களது முதல் கட்ட ஆய்வில் கரியமல்லூர் கிராமத்தில் விழுந்தது, எரிகல் என்பது தெரிய வந்துள்ளது.
அந்த இடத்தில் நாங்கள் சேகரித்த பொருட்கள் மிகவும் சிறிய அளவில் இருந்தாலும் அதிக எடையைக் கொண்டிருந்தன.
இவற்றில் இரும்பும், நிக்கலும் அதிக அளவில் கலந்து காணப்படுகிறது. இது அதிக ஈர்ப்பு விசையுடன் பூமியில் விழுந்ததால்தான் பலத்த அதிர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும், இது அபூர்வ வகை எரிகல் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum