Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஈழத் தமிழர்களின் உரிமையை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும்

Go down

ஈழத் தமிழர்களின் உரிமையை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் Empty ஈழத் தமிழர்களின் உரிமையை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும்

Post by oviya Mon Mar 02, 2015 1:03 pm

இலங்கையில் தமிழர்கள் உரிமையோடு வாழ வேண்டுமாயின் அந்த உரிமையை சர்வதேச சமூகத்தால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும். ஏனெனில் இலங்கையில் ஏற்படுகின்ற ஆட்சி மாற்றம் என்பது தலைமாற்றம் மட்டுமே அன்றி வேறெதுவும் இல்லை.
எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று சொல்லுவார். அதே ஆள் ஆட்சிப்பீடம் ஏறினால் போதும் சொன்னதெல்லாம் மறந்து, தமிழர்களுக்கு இந்த நாட்டில் உரிமை கிடையாது என்று பகிரங்கமாகக் கூறுவார். இதுவே இந்நாட்டின் வரலாறாயிற்று.

எனவே தமிழர்களின் பிரச்சினைக்கு சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள் என்பது நிறுத்திட்டமான உண்மை.

அவ்வாறு சிங்கள ஆட்சியாளர்கள் தாமாக முன்வந்து தீர்வைத் தருதல் என்ற ஒரு நிலைமை ஏற்படுவதாக இருந்தால்,தமிழர்களின் பிரச்சினையால் நாங்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை என்று சிங்கள சமூகம் முழுமையாக உணரும் போதே அது சாத்தியமாகும்.

அத்தகையதொரு சாத்தியப்பாடு விடுதலைப் புலிகளின் காலத்திலேயே ஏற்பட்டிருக்க முடியும்.

விடுதலைப்புலிகள் நடத்திய விமானத் தாக்குதலின் அடுத்த கட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பதாக இருந்திருக்கும்.

தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை சிங்கள மக்களே வலியுறுத்தியிருப்பர். அந்தளவிற்கு புலிகளின் விமானத் தாக்குதல் வேலை செய்திருக்கும்.

எனினும் விடுதலைப் புலிகள் விமானத்தாக்குதல் நடத்தும் திறனை வெளிப்படுத்திய போது, புலிகளை ஒடுக்கவேண்டும் என சர்வதேச சமூகம் முடிவு செய்தது போலும். அதன் விளைவே 2009ம் ஆண்டில் நடந்த இறுதிப் போராகும்.

ஆக, தமிழர்கள் தங்களின் உரிமைகளை தங்களின் தியாகத்தின் ஊடாக அடையவிருந்த வேளையில், சர்வதேச சமூகத்தின் சதி அரங்கேறியது. இதன் காரணமாக தமிழினம்பட்ட துயரங்களை நாம் சொல்லவேண்டியதில்லை.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று மகிந்த ராஜபக்ச­ சர்வதேச சமூகத்திடம் உறுதி அளித்திருந்த போதிலும் அதனை அவர் செய்ய மறுத்ததோடு சர்வதேச சமூகத்தை அதட்டவும் முற்பட்டார்.

ஐ.நா சபையை விமர்சிக்கும் அளவில் மகிந்த ராஜபக்­வின் தடிப்பு இருந்தது.

இச் சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்­சவை முதலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் முடிவு கடந்த ஜனவரி 8ந் திகதி நிறைவேறியது.

இந்த நிறைவேற்றம் சர்வதேச சமூகத்திற்குத் திருப்தியாக இருக்கலாமே அன்றி பூரண திருப்தியாக இருக்க முடியாது.

ஏனெனில் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. இருந்தும் மகிந்த ராஜபக்­சவை வீட்டுக்கு அனுப்பியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என சர்வதேச சமூகம் கருதி அமைதி அடைந்து விடுமோ! என்ற ஏக்கம் ஈழத்தமிழர்களிடம் நிறையவே உண்டு.

எனவே ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய இலங்கைத் தமிழினம் இன்று வெறுங்கையோடு நிற்கிறது.

மீளவும் ஒரு போராட்டம் சாத்தியமற்றது என்ற கருத்துக்கள் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ள இந்த வேளையில், தமிழர்களின் உரிமை என்பது சர்வதேச சமூகத்தால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என்பது நிரூபணமாகின்றது.

ஆக, சர்வதேசத்தின் பணி மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியதோடு முடியவில்லை. மாறாக சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழர்களின் உரிமையை வலிந்து பெற்றுத்தருவதாக இருக்கவேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum