Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மக்கள் விடுதலை முன்னணி

Go down

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மக்கள் விடுதலை முன்னணி Empty நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மக்கள் விடுதலை முன்னணி

Post by oviya Sun Mar 01, 2015 1:01 pm

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாங்கள் எதிரிகளில்லை, எனினும் தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் ஊடாக தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனை கூறியுள்ளார்.

மேலும் புதிதாக தேர்தல் நடத்தி, அதன் மூலம் தெரிவாகின்ற உறுப்பினர்களின் ஊடாகவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மேலும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினர் அரசாங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் 100 நாள் வேலைத்திட்டத்தை குழப்ப முயற்சித்து வருகின்றனர்: ரில்வின் சில்வா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் முன்வைக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கே மக்கள் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஆணையை வழங்கியதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தேசிய நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ள நாட்டுக்கு முக்கியமான சில சட்டமூலங்களான தகவல் அறியும் சட்டம், புதிய நீதித்துறை சட்டம்,கட்சி மாறினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகும் சட்டம், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் சட்டம், நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பவற்றை நிறைவேற்ற வேண்டும்.

அதேவேளை தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ஒதுக்கி வைத்து விட்டு 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

தேர்தல் முறை சீர்த்திருந்தம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைந்தல் ஆகிய திருத்தங்கள் இரண்டும் ஒரே தடவையில் மேற்கொள்ள வேண்டும் என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் பதிலளித்த ரி்ல்வின் சில்வா, தற்போதைய தேர்தல் முறையில் விருப்பு வாக்கு போட்டி மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஜே.வி.பி வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது.

தேவையானால் ஜே.வி.பியிடம் கற்றுக்கொள்ள முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட சில தலைவர்கள் , மக்கள் நம்பிய இந்த 100 நாள் வேலைத்திட்டத்தை குழப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum