Top posting users this month
No user |
Similar topics
பொன்சேகாவின் மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்
Page 1 of 1
பொன்சேகாவின் மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்
தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் தனக்கு வழங்குமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மார்ச் மாதம் 9 ஆம் திகதி இந்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இராணுவ நீதிமன்றம் தன்னை குற்றவாளி என முடிவு செய்த பின்னர் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததாகவும் அந்த இடத்திற்கு ஜெயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்துள்ளதாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், மீண்டும் தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்ட ரீதியான உரிமை இருப்பதால், அந்த பதவிக்கு தன்னை பெயரிடும் உத்தரவிட வேண்டும் எனவும் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இது சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளருக்கு உத்தரவிட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட உள்ளிட்டோருக்கு அறிவிப்பாணை அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் மாதம் 9 ஆம் திகதி இந்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இராணுவ நீதிமன்றம் தன்னை குற்றவாளி என முடிவு செய்த பின்னர் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததாகவும் அந்த இடத்திற்கு ஜெயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்துள்ளதாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், மீண்டும் தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்ட ரீதியான உரிமை இருப்பதால், அந்த பதவிக்கு தன்னை பெயரிடும் உத்தரவிட வேண்டும் எனவும் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இது சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளருக்கு உத்தரவிட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட உள்ளிட்டோருக்கு அறிவிப்பாணை அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையர் ஒருவரின் மனுவை ஆஸி. மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது!
» லஞ்ச ஊழல்களை விசாரிக்க தனியான நீதிமன்றம்!- பணிப்பாளர்
» காமினி செனரத்தின் வங்கி கணக்குகளை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது!
» லஞ்ச ஊழல்களை விசாரிக்க தனியான நீதிமன்றம்!- பணிப்பாளர்
» காமினி செனரத்தின் வங்கி கணக்குகளை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum