Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இடமாற்றம் வழங்குமாறு கோரி அரச அலுவலர்கள் வடமாகாண ஆளுநருக்கு மகஜர்

Go down

இடமாற்றம் வழங்குமாறு கோரி அரச அலுவலர்கள் வடமாகாண ஆளுநருக்கு மகஜர் Empty இடமாற்றம் வழங்குமாறு கோரி அரச அலுவலர்கள் வடமாகாண ஆளுநருக்கு மகஜர்

Post by oviya Wed Feb 25, 2015 12:59 pm

வடக்கு , கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாணத்திற்கு இணைக்கப்பட்டிருந்த அரச அலுவலகர்கள் தங்களுக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி ஆளுநர் பளிகக்காரவிற்கு மகஜர் ஒன்றினை இன்று வழங்கியுள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் திருகோணமலையில் இயங்கி வந்த வடக்கு மாகாண சபையின் கீழ் பணியாற்றி வந்தனர்.

எனினும் ஒரு வருட காலத்தின் பின்னர் அவர்களுக்கு இடமாற்றம் வழங்குவதாக கூறி 2010ம் ஆண்டு யாழ்.மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

எனினும் கடந்த 5 வருடங்களாக இடமாற்றம் வழங்கப்படாது பெண்கள் உட்பட 168 அரச உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்தில் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றி வருகின்றனர்.

எனவே புதிய ஆளுநர் தங்களுக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரி மகஜர் ஒன்றினைக் இன்று வடக்கு மாகாண ஆளுநரின் இல்லத்தில் கையளித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் பிரிக்கப்பட்ட பின்னர் அன்றைய அசாதரண சூழல் காரணமாக வடக்கு மாகாண சபை திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வந்தது.

நாங்கள் 2007ம் ஆண்டு முதல் வடக்கு மாகாணசபையின் கீழ் கடமையாற்றி வந்தோம். எனினும் 2010ம் ஆண்டு வடக்கு மாகாண சபை யாழ்ப்பாணத்திற்கே மாற்றப்பட்டது.

சீட்டுக்குலுக்கல் மூலம் எமது பெயர்கள் வடக்கு மாகாணத்திற்குச் சென்று கடமையாற்ற அனுமதிக்கப்பட்டோம். எனினும் ஒரு வருடத்தில் இடமாற்றம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் கடந்த 5 வருட காலமாக இடமாற்றம் செய்யப்படவில்லை. இது குறித்து முன்னாள் ஆளுநர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதம செயலருக்கும் பல தடவைகள் தெரியப்படுத்தி இருந்தோம். எனினும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை.

எனவே புதிய அரசு உருவாக்கப்பட்டு வடக்கு கிழக்கில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் புதிய ஆளுநர் எமக்கு விரைவில் இடமாற்றத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum