Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.நா அறிக்கையை தாமதிக்காது சமர்ப்பிக்கவும்: வடக்கு முதல்வர் வலியுறுத்து

Go down

ஐ.நா அறிக்கையை தாமதிக்காது சமர்ப்பிக்கவும்: வடக்கு முதல்வர் வலியுறுத்து Empty ஐ.நா அறிக்கையை தாமதிக்காது சமர்ப்பிக்கவும்: வடக்கு முதல்வர் வலியுறுத்து

Post by oviya Wed Feb 18, 2015 1:28 pm

ஐ.நா.வின் விசாரணை அறிக்­கையை கட்டாயமாக எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணை அறிக்கையே வெளிவராமல் தாமதப்படுத்தி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் போய்விட கூடாது என்பதற்காகவே அவ் அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுமாறு தான் வலியுறுத்துவதாகவும், ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கத்தை வேண்டுமானால் 6 மாதங்களுக்கு பின்னர் வெளியிடுங்கள் எனவும் வடமாகாண முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாத அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும் என தமிழ் மக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தன.

எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக இவ் அறிக்கையை வெளியிடுவதை தள்ளிவைக்குமாறு தற்போதைய அரசு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடுவதை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் காலம் கடந்து பயனற்று போனதினால் ஐ.நாவின் இம்முடிவும் தமிழ் மக்கள் மத்தியில் சலிப்புத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் தற்போது ஐ.நாவை நம்பியுள்ள தமிழ் மக்கள் குறித்த விசாரணை அறிக்கையை கட்டாயமாக எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என கோரி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum