Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா அறிக்கையை தாமதிக்காது சமர்ப்பிக்கவும்: வடக்கு முதல்வர் வலியுறுத்து
Page 1 of 1
ஐ.நா அறிக்கையை தாமதிக்காது சமர்ப்பிக்கவும்: வடக்கு முதல்வர் வலியுறுத்து
ஐ.நா.வின் விசாரணை அறிக்கையை கட்டாயமாக எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாரணை அறிக்கையே வெளிவராமல் தாமதப்படுத்தி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் போய்விட கூடாது என்பதற்காகவே அவ் அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுமாறு தான் வலியுறுத்துவதாகவும், ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கத்தை வேண்டுமானால் 6 மாதங்களுக்கு பின்னர் வெளியிடுங்கள் எனவும் வடமாகாண முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாத அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும் என தமிழ் மக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தன.
எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக இவ் அறிக்கையை வெளியிடுவதை தள்ளிவைக்குமாறு தற்போதைய அரசு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடுவதை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் காலம் கடந்து பயனற்று போனதினால் ஐ.நாவின் இம்முடிவும் தமிழ் மக்கள் மத்தியில் சலிப்புத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தற்போது ஐ.நாவை நம்பியுள்ள தமிழ் மக்கள் குறித்த விசாரணை அறிக்கையை கட்டாயமாக எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என கோரி வருகின்றனர்.
விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாரணை அறிக்கையே வெளிவராமல் தாமதப்படுத்தி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் போய்விட கூடாது என்பதற்காகவே அவ் அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுமாறு தான் வலியுறுத்துவதாகவும், ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கத்தை வேண்டுமானால் 6 மாதங்களுக்கு பின்னர் வெளியிடுங்கள் எனவும் வடமாகாண முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாத அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும் என தமிழ் மக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தன.
எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக இவ் அறிக்கையை வெளியிடுவதை தள்ளிவைக்குமாறு தற்போதைய அரசு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடுவதை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் காலம் கடந்து பயனற்று போனதினால் ஐ.நாவின் இம்முடிவும் தமிழ் மக்கள் மத்தியில் சலிப்புத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தற்போது ஐ.நாவை நம்பியுள்ள தமிழ் மக்கள் குறித்த விசாரணை அறிக்கையை கட்டாயமாக எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என கோரி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 54 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வர் வலியுறுத்து
» உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்!– வடக்கு முதல்வர்
» கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: வடக்கு முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல்
» உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்!– வடக்கு முதல்வர்
» கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: வடக்கு முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum