Top posting users this month
No user |
Similar topics
நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள்
Page 1 of 1
நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள்
எமது நிலத்தை எம்மிடம் தாருங்கள் எனும் கோரிக்கையை முன்வைத்து சம்பூர் மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் கிளிவெட்டி நலன்புரி முகாமிற்கு முன்பாக நேற்று இடம்பெற்றுள்ளது.
யுத்தம் நிலவிய போது 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து கிளிவெட்டி, மணற்சேனை, பட்டித்திடல், கட்டைபறிச்சான் உள்ளிட்ட நலன்புரி முகாம்களில் இம்மக்கள் தங்கியுள்ளனர்.
இதுவரையிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மூதூர் கிழக்கு சம்பூர் மக்கள் தங்களை சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியமர்த்துமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்துடன் தமது நிலத்தை தம்மிடமிருந்து பறிக்க காரணமாகவிருந்த அனல்மின்சார நிலைய வேலைகளை தடை செய்யுமாறும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசே தங்களை சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்று, எங்களுக்கு சொந்த மண் வேண்டும், சம்பூர் அணல் மின்சார நிலைய வேலைகளை ஆரம்பிக்காதே, காணாமல் போன எங்கள் பிள்ளைகள் எங்கே, போன்ற பதாதைகளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.
தமது நிலத்தை விட்டு வாழ முடியாது எனத் தெரிவித்த மக்கள் தம்மை இனியும் இவ்வாறு துன்புறுத்தாமல் மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
எங்களது நிலத்தை தராவிட்டால் ஒரு குப்பி நஞ்சு தாருங்கள் என கண்ணீர் விட்டு கதறியபடி சம்பூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாம்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகளின்றி பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் கிளிவெட்டி நலன்புரி முகாமிற்கு முன்பாக நேற்று இடம்பெற்றுள்ளது.
யுத்தம் நிலவிய போது 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து கிளிவெட்டி, மணற்சேனை, பட்டித்திடல், கட்டைபறிச்சான் உள்ளிட்ட நலன்புரி முகாம்களில் இம்மக்கள் தங்கியுள்ளனர்.
இதுவரையிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மூதூர் கிழக்கு சம்பூர் மக்கள் தங்களை சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியமர்த்துமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்துடன் தமது நிலத்தை தம்மிடமிருந்து பறிக்க காரணமாகவிருந்த அனல்மின்சார நிலைய வேலைகளை தடை செய்யுமாறும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசே தங்களை சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்று, எங்களுக்கு சொந்த மண் வேண்டும், சம்பூர் அணல் மின்சார நிலைய வேலைகளை ஆரம்பிக்காதே, காணாமல் போன எங்கள் பிள்ளைகள் எங்கே, போன்ற பதாதைகளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.
தமது நிலத்தை விட்டு வாழ முடியாது எனத் தெரிவித்த மக்கள் தம்மை இனியும் இவ்வாறு துன்புறுத்தாமல் மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
எங்களது நிலத்தை தராவிட்டால் ஒரு குப்பி நஞ்சு தாருங்கள் என கண்ணீர் விட்டு கதறியபடி சம்பூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாம்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகளின்றி பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடல், நிலம், மக்கள்
» இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய இந்து கோயில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லீம் மக்கள்!
» தீர்வு இல்லாவிடில் போராட்டம்: ரஞ்சன் ஜயலால் சம்பிக்கவிற்கு எச்சரிக்கை
» இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய இந்து கோயில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லீம் மக்கள்!
» தீர்வு இல்லாவிடில் போராட்டம்: ரஞ்சன் ஜயலால் சம்பிக்கவிற்கு எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum