Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் இணக்கம் கட்சிக்குள் இல்லை: சுசில் பிரேமஜயந்த
Page 1 of 1
மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் இணக்கம் கட்சிக்குள் இல்லை: சுசில் பிரேமஜயந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் இணக்கம் எதுவும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரதமர் வேட்பாளராக ஒருவரை நிறுத்தும் அதிகாரம் சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி- முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்கும் நடவடிக்கை ஒன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்கு இணங்கியுள்ளதா?.
பதில்- இல்லை. அது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கட்சிகளுடன் அப்படியான எந்த இணக்கமும் இல்லை. சில அரசியல்வாதிகள் அப்படியான கதையை கூறி வருகின்றனர். காலத்திற்கு காலம் கூறும் கதைகளை ஏற்றுக்கொள்ளும் அவசியமில்லை.
கேள்வி- சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவாரா?.
பதில்- இல்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது.
கேள்வி- எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய நபரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற யோசனை கட்சியில் உள்ளதா?.
பதில்- அது பற்றி தீர்மானத்தை கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும். பொதுத் தேர்தல் நெருங்கும் போது ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்றார்.
மஹிந்தவை பிரதமராக்குமாறு கோரப்படவில்லை: அனுர பிரியதர்சன யாப்பா
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குமாறு கோரப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதசர்ன யாப்பா தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை பிரதமராக போட்டியிடச் செய்யுமாறு இதுவரையில் எவரும் கோரவில்லை. கட்சியின் மத்திய செயற்குழுவினால் இன்று சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த தீர்மானத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது. கட்சியின் யாப்பு விதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தீர்மானங்கள் இன்றைய தினமே செயற்குழுவிடம்!
இன்று கூடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் அகில இலங்கை செயற்குழுவிடம் முன்வைக்கவுள்ளதாக அதன் சிரேஷ்ட துணை தலைவரான டீ.எம்.எம் பவுசி தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் வெற்றிடங்களாக காணப்படும் பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியலமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
பிரதமர் வேட்பாளராக ஒருவரை நிறுத்தும் அதிகாரம் சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி- முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்கும் நடவடிக்கை ஒன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்கு இணங்கியுள்ளதா?.
பதில்- இல்லை. அது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கட்சிகளுடன் அப்படியான எந்த இணக்கமும் இல்லை. சில அரசியல்வாதிகள் அப்படியான கதையை கூறி வருகின்றனர். காலத்திற்கு காலம் கூறும் கதைகளை ஏற்றுக்கொள்ளும் அவசியமில்லை.
கேள்வி- சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவாரா?.
பதில்- இல்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது.
கேள்வி- எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய நபரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற யோசனை கட்சியில் உள்ளதா?.
பதில்- அது பற்றி தீர்மானத்தை கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும். பொதுத் தேர்தல் நெருங்கும் போது ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்றார்.
மஹிந்தவை பிரதமராக்குமாறு கோரப்படவில்லை: அனுர பிரியதர்சன யாப்பா
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குமாறு கோரப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதசர்ன யாப்பா தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை பிரதமராக போட்டியிடச் செய்யுமாறு இதுவரையில் எவரும் கோரவில்லை. கட்சியின் மத்திய செயற்குழுவினால் இன்று சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த தீர்மானத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது. கட்சியின் யாப்பு விதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தீர்மானங்கள் இன்றைய தினமே செயற்குழுவிடம்!
இன்று கூடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் அகில இலங்கை செயற்குழுவிடம் முன்வைக்கவுள்ளதாக அதன் சிரேஷ்ட துணை தலைவரான டீ.எம்.எம் பவுசி தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் வெற்றிடங்களாக காணப்படும் பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியலமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படும்: உதய கம்மன்பில
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி பிரதேச மட்டத்தில் யோசனை முன்வைப்பு
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படும்: உதய கம்மன்பில
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி பிரதேச மட்டத்தில் யோசனை முன்வைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum