Top posting users this month
No user |
மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதனை சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை!
Page 1 of 1
மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதனை சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை!
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதனை சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக 2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் காலத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில், தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் விசாரணை நடத்த வேண்டுமென கோரி வருகின்றனர்.
எனினும், இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சியின் மற்றுமொரு தரப்பினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்து பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டவர்களே அதிகளவில் இவ்வாறு அதிருப்தியடைந்துள்ளனர்.
தாம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் மூடிமறைக்கப்படும் என்ற எண்ணத்தில் கடந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட போதிலும். தற்போது மீளவும் விசாரணை நடத்தப்படுவது நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டவர்களை அரசியல் ரீதியாக நிர்க்கதியாக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்வைக்கப்பட்டு வருவதாக குறித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக 2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் காலத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில், தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் விசாரணை நடத்த வேண்டுமென கோரி வருகின்றனர்.
எனினும், இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சியின் மற்றுமொரு தரப்பினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்து பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டவர்களே அதிகளவில் இவ்வாறு அதிருப்தியடைந்துள்ளனர்.
தாம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் மூடிமறைக்கப்படும் என்ற எண்ணத்தில் கடந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட போதிலும். தற்போது மீளவும் விசாரணை நடத்தப்படுவது நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டவர்களை அரசியல் ரீதியாக நிர்க்கதியாக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்வைக்கப்பட்டு வருவதாக குறித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum