Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதிய வீடு கட்டித் தரக் கோரி மட்டக்களப்பில் பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Go down

புதிய வீடு கட்டித் தரக் கோரி மட்டக்களப்பில் பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் Empty புதிய வீடு கட்டித் தரக் கோரி மட்டக்களப்பில் பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Post by oviya Tue Feb 10, 2015 1:19 pm

மட்டக்களப்பு கிரான் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று தொப்பிகல் மீயாங்கல்குள பொதுமக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.
தங்களுக்குரிய கிராம சேவகர் பிரிவில் புதிய வீடுகளை கட்டித்தரும் படியும், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரச மானியப் பொருட்களையும், அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கால் நடை மற்றும் மானியப் பொருட்களையும் அரசாங்கத்துக்கு சொந்தமான அரச உடமைகளையும் மோசடி செய்து கொண்டிருக்கும் கிராம சேவகரை இடமாற்றம் செய்யுமாறும் கோரி இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச மக்கள் 1988 சொந்த குடியிருப்புகளை விட்டு வெளியேறிய பின்பு 1990 ஆண்டு மீண்டும் மீள்குடியேறினோம், பின்பு விடுதலை புலிகளின் ஆதிக்கத்தினாலும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கையினாலும் 1991 ஆண்டு மீண்டும் எங்களது உடமைகள் அனைத்தையும் விட்டு வெளியேறினோம், மீண்டும் 1992 ஆண்டு மீண்டும் எங்களது இருப்பிடத்தை வந்தடைந்தோம், பின்னர் 1994 ஆண்டு விடுதலை புலிகளின் கேந்திர நிலையமாக இருந்த இந்த கிராமம் பயன்படுத்தப்பட்டதால் எங்களை வலுக்கட்டாயமாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றினார்கள், பின்பு மீண்டும் முன்னால் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் மீண்டும் குடியேற்றப்பட்டோம் என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் தங்களுக்குரிய வாழ்வாதார வசதிகளோ வீட்டு வசதிகளோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்றும் தங்களுடைய கிராமசேவகர் மேற்படி விடயங்களை புறக்கணித்து வருவதாக தெரிவித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் கிரான் பிரதேச செயலாளர் ஆகியோர்களுக்கு முகவரியிடப்பட்டு கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரத்திடம் கையளித்தனர்.

மகஜரைப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் குறித்த கிராம சேவகருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருப்பின் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், குறித்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum