Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மேற்குலக ஆலோசனையை மதித்தே சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்

Go down

மேற்குலக ஆலோசனையை மதித்தே சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார் Empty மேற்குலக ஆலோசனையை மதித்தே சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்

Post by oviya Tue Feb 10, 2015 1:18 pm

ஈழத்தமிழர்களுடைய தற்போதைய தலைமையை வழிநடத்தும் திரு. இரா. சம்பந்தன் மேற்குலகோ, இந்தியாவோ இலகுவாக அணுகுவதற்கான தலைமையாக பார்க்கப்படுகிறார்.
82 வயதுடைய திரு. இரா.சம்பந்தன் இலங்கையின் சுதந்திரதின விழாவில் கலந்து கொள்ளவதால் அவருக்கு ஏதும் நன்மை ஏற்படப் போவதில்லை. மாறாக அவர் மேற்குலக இராஜதந்திரிகளின் விருப்பை நிறைவேற்றினார்.

இவ்வாறு கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளரான கனடாவில் இருக்கும் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார்.

சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கையின் சனத்தொகையில் 75 வீதமாகவுள்ள சிங்களவர்கள் மத்தியில் ஒரு சிறு நம்பிக்கை துளிர்ப்பதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துப் பரவுவதற்கு சம்பந்தன் வழிவகுத்துள்ளார்.

அவருக்கான எதிர்ப்புக்கள் வட-கிழக்கு மாகாணங்களின் ஒரு பகுதியில் இருந்தே கிளம்புகின்றன. இது ஒட்டுமொத்த வடக்குக் கிழக்கின் கருத்தாகவும் இருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வட-கிழக்கின் ஒட்டுமொத்தப் பலமாக இருப்பதால் அவருக்கு அனைத்து மக்களின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய தேவையுள்ளது.

ஒரு இனம் மீள்தலிற்கான வலியிலுள்ள போது அந்த இனத்தின் தலைவன் தனக்கு ஏற்புடயதைத் துணிச்சலாகச் செய்யும் சமான்யம் மிக்கவனாக இருக்க வேண்டும். அதற்குரிய பண்பை, ஆதிக்கத்தை, அனுபவத்தை வெளிப்படுத்துபவையாகவே திரு.சம்பந்தனின் துணிச்சலான முடிவுகள் இருக்கின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சியும், இதர நான்கு போராட்ட அமைப்புக்களையும் கொண்டது. இது மிகப் பெரிய பலம். ஆனால் கூட்டமைப்புக்கு என்று தனியான யாப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் இன்றும் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுகின்றார்கள் என்பது உள்ளிட்ட பல விடயங்களை திரு. சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum