Top posting users this month
No user |
Similar topics
17 தமிழ் கைதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்: பயங்கரவாத தடுப்பு பிரிவு
Page 1 of 1
17 தமிழ் கைதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்: பயங்கரவாத தடுப்பு பிரிவு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீ்ழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 தமிழ் கைதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்காக அண்மையில் ஏற்படுத்தப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தில், சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இதனை கண்டித்துள்ள அரசியல் கைதிகளை விடுதலைக்கான அமைப்பை சேர்ந்த அருட்தந்தை என். சக்திவேல் , இதன் மூலம் விடுதலையை எதிர்பார்த்திருந்த கைதிகள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட சிங்கள இனவாத தரப்பை மகிழ்விக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அருட்தந்தை சக்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரண்டு தமிழ் கைதிகளின் உடல் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவற்துறையினர் பதிவு செய்து கொண்ட ஒரு வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு வழக்குகளை தொடர்வது அநீதியானது எனக் கூறி, இவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த கைதிகளின் பிரச்சினை குறித்து தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது பொறுப்புமிக்கவர்களோ உரிய கவனத்தை செலுத்தவில்லை எனவும் அருட்தந்தை என். சக்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்காக அண்மையில் ஏற்படுத்தப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தில், சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இதனை கண்டித்துள்ள அரசியல் கைதிகளை விடுதலைக்கான அமைப்பை சேர்ந்த அருட்தந்தை என். சக்திவேல் , இதன் மூலம் விடுதலையை எதிர்பார்த்திருந்த கைதிகள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட சிங்கள இனவாத தரப்பை மகிழ்விக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அருட்தந்தை சக்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரண்டு தமிழ் கைதிகளின் உடல் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவற்துறையினர் பதிவு செய்து கொண்ட ஒரு வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு வழக்குகளை தொடர்வது அநீதியானது எனக் கூறி, இவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த கைதிகளின் பிரச்சினை குறித்து தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது பொறுப்புமிக்கவர்களோ உரிய கவனத்தை செலுத்தவில்லை எனவும் அருட்தந்தை என். சக்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அவன்காட் நிறுவனத்திற்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம்: அனுரகுமார திஸாநாயக்க
» மீள அறவிடப்படாத ஒரு பில்லியன் ரூபாய் கடன்தொகை: மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணை
» பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வித்தியா கொலை வழக்கு! கொலையாளிகளை கண்டுபிடிக்குமா?
» மீள அறவிடப்படாத ஒரு பில்லியன் ரூபாய் கடன்தொகை: மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணை
» பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வித்தியா கொலை வழக்கு! கொலையாளிகளை கண்டுபிடிக்குமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum