Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேசிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்வதன் ஊடாக உணவுப் பொருள் இறக்குமதியை குறைக்கலாம்: வசந்த அலுவிஹார

Go down

தேசிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்வதன் ஊடாக உணவுப் பொருள் இறக்குமதியை குறைக்கலாம்: வசந்த அலுவிஹார Empty தேசிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்வதன் ஊடாக உணவுப் பொருள் இறக்குமதியை குறைக்கலாம்: வசந்த அலுவிஹார

Post by oviya Mon Dec 14, 2015 1:54 pm

தேசிய உணவு திட்டத்தினை அறிமுகம் செய்வதன் ஊடாக இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களின் எண்ணிக்கைகளை குறைக்கலாம் என விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உணவு பாதுகாப்பு தொடர்பில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, விவசாயத்துறைக்காக தேசிய திட்டம் மற்றும் கொள்கை என்பன அவசியம் என அமைச்சர் வசந்த அலுவிஹார வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு 760 மில்லியன் தொன் உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதற்காக 154,543 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு 659.6 மில்லியன் தொன் உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உள்நாட்டில் உணவு பொருட்களை உற்பத்தி செய்வதன் ஊடாக இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

எனவே, உள்நாட்டு உணவு பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக வசந்த அலுவிஹார மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum