Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்

Go down

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்  Empty வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்

Post by oviya Tue Dec 08, 2015 1:58 pm

வட மாகாணத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது அரசியல் அழுத்தங்கள் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இடம்பெற்று வருகின்ற காடழிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான உத்தரவை தான் ஏற்கனவே பிறப்பித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பிரகாரம், மன்னார் மாவட்டத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பும், வவுனியா மாவட்டத்தில் 325 ஏக்கர் நிலப்பரப்பும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 445 ஏக்கர் நிலப்பரப்பும் அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.



வடக்கில் காடழிக்கப்பட்டு மீள்குடியேற்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றமைக்கு அரசியல் அழுத்தங்களும் காரணமாக அமைந்திருந்ததாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இவ்வாறு இடம்பெறுகின்ற சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் தான் உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விரைவில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

குறித்த குழுவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் ஊடாக பெறப்படும் அறிக்கையின் பிரகாரம், காடழிப்பு தொடர்பில் தான் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இயற்கை வளங்களுக்கு சேதம் விளைவிக்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த தான் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

மாணிக்கக்கல் அகழ்விற்காக தமது அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக வெளியான தகவலை நிராகரித்த ஜனாதிபதி, தான் ஆட்சி பீடத்திற்கு வந்தவுடன் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவ்வாறான நான்கு வெளிநாட்டு நிறுவனங்களின் அனுமதி பத்திரத்தை ரத்து செய்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

பொலித்தீன் பாவனைக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை-ஜனாதிபதி

2016 ஜனவரி முதலாம் திகதி முதல் பொலித்தீன் பாவனைக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீர்பாசனம் மற்றும் நீர்வடிகாலமைப்பச் சபையின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் நேற்று(7) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இனிவரும் காலங்களில் சுற்றாடல் மாசுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவம் அதற்காக புதிய சட்டதிட்டங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் பொலித்தீன் பாவனையை முற்றாக ஒழிப்பதோடு 2018 ம் ஆண்டு தொடக்கம் எஸ்பஸ்டோஸ் கூரைத் தகடு பாவனையையும் முற்றாக ஒழிக்கப்போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


அத்துடன் இந்நாட்டில் இரத்தினக்கல் கைத்தொழில் துறையை மேம்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதோடு வெளிநாட்டு நிறவனங்களின் தொழிநுட்ப அறிவு மற்றும் பயிற்சி என்பன எமது நாட்டு கைத்தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு எமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum