Top posting users this month
No user |
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முடியாது: நீதிமன்றம் தீர்ப்பு
Page 1 of 1
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முடியாது: நீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுதலை செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசாங்கத்திற்கே காணப்படுவதாகவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்ட வழக்கொன்றின் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே காணப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தமிழக அரசு விடுதலை செய்தது.
இந்த விடுதலைக்கு எதிராக மத்திய அரசு வழக்கு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கு விசாரணைகள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கொண்டு வரப்பட்டன.
இதன்பிரகாரமே இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசாங்கத்திற்கே காணப்படுவதாகவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்ட வழக்கொன்றின் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே காணப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தமிழக அரசு விடுதலை செய்தது.
இந்த விடுதலைக்கு எதிராக மத்திய அரசு வழக்கு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கு விசாரணைகள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கொண்டு வரப்பட்டன.
இதன்பிரகாரமே இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum