Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


என்று தணியும் இந்த மேற்குலக தாக்குதல்?? வளர்த்த கடா மார்பில் பாயுது!

Go down

என்று தணியும் இந்த மேற்குலக தாக்குதல்?? வளர்த்த கடா மார்பில் பாயுது! Empty என்று தணியும் இந்த மேற்குலக தாக்குதல்?? வளர்த்த கடா மார்பில் பாயுது!

Post by oviya Thu Nov 19, 2015 12:30 pm

“வளர்த்த கடா மார்பில் பாய்வது போல” அவ்வப்போது மேற்கு உலக நாடுகளால் சுயநல சிந்தனையோடு உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் இன்று அதே மேற்கு உலகுக்கு சவால் விட்டுக்கொண்டு இருக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கொடூரமான தாக்குதலை நடத்தியிருந்தது.

இத் தாக்குதல் சம்பவமானது இத்தோடு நின்றுவிடும் என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்த அமைப்பு அடுத்தது தமது இலக்கு அமெரிக்கா என்று அறிவித்துள்ளது.

தமது ஆயுத விற்பனைக்கும், தமது இராணுவ ஆதிக்கத்தை ஏனைய நாடுகளின் பாதுகாப்புக்கு என்று கூறி உள்நாட்டு விடயங்களை உளவு பார்ப்பதற்கு இந்த மேற்குலக நாடுகள் முன்னர் இப்படியான அமைப்புக்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை தொடுத்திருந்தன.

இந்நிலையில் தான் அல்ஹைதா தோன்றியது. அமெரிக்கா வளர்க்க, பின்லேடன் இரட்டைக் கோபுரத்தை தரைமட்டமாக்கினார். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கே மிகப்பெரிய சவாலாக அமைந்தது அது.

அதற்குப் பின்னர் இப்பொழுது பிரான்ஸ் இலக்காகியிருக்கின்றது. 2நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதல் சம்பவத்தோடு இன்று பிரான்ஸின் புறநகர்ப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது போன்ற தாக்குதல்கள் நடக்க காரணங்கள் பலவாறாக கூறப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இது தொடர்பாக தமிழ்வின்னில் பிரத்யேக கட்டுரையாளார் ராக்கி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையில் குறிப்பிட்டது போல பிரான்ஸ் பிரதமர் தான் எதிரிகளின் பிரதான இலக்கு என்றும்.

ஆனால் அதில் இருந்து அவர் தப்பியிருக்கின்றார். இனிவரும் காலங்களில் இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடரலாம் எனவும் எழுதியிருந்தார்.

இதுவொரு புறமிருக்க, அரசியல் தஞ்சம் கோரியவரில் ஒருவர் தான் இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர் என்றும், புதிய தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன.

இது இன்னுமொரு புதிய பாதையை பிரான்ஸ் திறக்கின்றதா என்கின்ற கேள்வியும் எழுகின்றது. அதாவது தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தனக்கு சாதகமாக்கப் பார்க்கின்றதா என எண்ணத்தோன்றுகின்றது.

பொதுவாக இப்பொழுது மேற்குலக நாடுகள் அகதிகளால் நிறைந்துகொண்டிருக்கின்றது.

இத் தாக்குதல்களை அகதி தஞ்சம் கோரியவர்கள் மீது சுமத்தி விட்டால், அதன் பின்னர் ஏதேனும் புதிய சட்டங்களை இயற்றி அரசியல் தஞ்சம் கோருபவர்களின் கோரிக்கைகளை இலகுவில் நிராகரித்து விடலாம் என்பதும் இவர்களின் கணக்காக இருக்கின்றது போலும்.

அப்படி ஏதேனும் நடக்குமாயின் அது இலங்கையில் இருந்து சென்று அகதி அந்தஸ்து கோருபவர்களின் விடயத்திலும் கடும் தாக்கத்தினை ஏற்படுத்தும், பலரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம்.

இதேவேளை, இந்த தொடரான தாக்குதல்கள் மேற்குலகின் ஆயுத விற்பனைக்கான தீர்வாகவும் பார்க்கலாம் அல்லவா.

எது எப்படியோ மேற்குலக நாடுகள் தமது கொள்கைகளை மாற்றுவதற்கு இந்த தாக்குதல் மிகவும் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்பொழுது புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் இருப்பிற்கு மிகப்பெரிய கேள்விக்குறி தான். ஏனெனில் எந்த யுத்த போராட்ட களங்களில் இருந்து தப்பித்து உயிர் பிச்சை கேட்டு சென்ற நாடுகளிலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுவதானது, தமிழ் மக்களுக்கு ஒரு சவாலே..!

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum