Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரான்ஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்

Go down

பிரான்ஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம் Empty பிரான்ஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்

Post by oviya Sat Nov 14, 2015 12:13 pm

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்

அவரது முழு உரை:

என் சக குடிமக்களே, நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நாம் சற்றும் எதிர்பாராத வேளையில் பாரீஸில் பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பலர் பலியாகினர். மிக அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது மிகவும் கொடூரமானது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். மேலும், நகரின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக எந்த ஒரு தாக்குதலும் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருக்கிறேன்.



அதில் இரண்டு முக்கிய முடிவுகள் எட்டப்பட்டும். ஒன்று நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்பது. இதனால், சில பொது இடங்கள் மூடப்படலாம், போக்குவரத்து மாற்றம் செய்யப்படலாம். தேவைப்பாட்டல் போலீஸ் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.

மற்றொன்று பிரான்ஸ் நாட்டுடனான அண்டை நாடுகளுக்குச் செல்லும் எல்லைப் பகுதிகள் பாதுகாப்பு கருதி மூடப்படும். இதன் மூலம், பிரான்ஸில் தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் யாரும் உள்ளே நுழைய முடியாது அதேபோல் இங்கு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் வெளியே தப்பிச் செல்ல முடியாது.

பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் நாம் அனைவரும் அமைதியுடன் இருப்பது மிகவும் அவசியம். அதேபோல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

பயங்கரவாதம் நம்மை அச்சுறுத்தியுள்ள நிலையில் நாம் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். மன உறுதியுடன் இருப்போம் என நான் நம்புகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

நம்மை அச்சுறுத்த வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். இந்த வேளையில் அச்சப்படாமலும் இருக்க முடியாது. ஆனால், இத்தகைய அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட தேசம் ஒன்று இருக்கிறது என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதன் மூலம் நாம் தீவிரவாதிகளை முறியடிக்க முடியும்.

குடிமக்களே, தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் இன்னமும் முடியவில்லை. சிக்கலான தருணங்கள் நீடிக்கின்றன. நமது பாதுகாப்புப் படையினர் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளிடம் இருந்து நம் தேசத்தை பாதுகாப்புப் படையினர் திறம்பட பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள்.

குடியாட்சி வாழ்க! பிரான்ஸ் வாழ்க.

இவ்வாறு ஹாலந்தே பேசினார்.

பாரிசில் தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 8 பேர் கொல்லப்பட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

பட்டக்லான் இசை அரங்கத்தில் மனித வெடிகுண்டுகளாக தாக்குதல் நடத்தவந்த மூன்று தீவிரவாதிகள் உடல் சிதறி பலியானதாகவும், மேலும் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடத்தவந்த மூன்று தீவிரவாதிகளும், கிழக்கு பாரிஸ் நகரில் உள்ள ஒரு தெரு வழியாக தப்பியோட முயன்ற ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒபாமா, மோடி கடும் கண்டனம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒபாமா, அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்துவது மூர்கத்தமான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.



இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடியும் தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,



பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum