Top posting users this month
No user |
Similar topics
செருப்படி! நாராயணனை பதம் பார்த்த பிரபாகரன்!
Page 1 of 1
செருப்படி! நாராயணனை பதம் பார்த்த பிரபாகரன்!
இந்தியா தேசிய பாதுகாப்பின் முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு விழுந்துள்ள செருப்படி விவகாரம், அதிகார வர்க்கத்தின் மீதான அடியாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்த ஒரு கருத்தரங்கத்தை 4ம் தேதி சென்னை மியூசிக் அகாதமியில் நடத்தியது இந்து ஆங்கில நாளேட்டின் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஆய்வு மையம்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் எம்.கே.நாராயணன்.
இதற்கு எதிராக மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததால், அரங்கத்திற்குள் வரும் பார்வையாளர்கள் அத்தனை பேரையும் சோதித்து அனுப்பினர்.
கேமராக்களுக்கும் மொபைல் கேமராக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தன.
கருத்தரங்கத்தில் பேசி முடித்துவிட்டு நாராயணன் வெளியேறும் போது, பார்வையாளராக கலந்துகொண்ட பிரபாகரன் என்ற இளைஞர், ""எல்லாத்துக்கும் நீதாண்டா காரணம்'' என சொல்லிக்கொண்டே செருப்பால் பளார்... பளார்... என அடித்தார்.
அப்போது அங்கிருந்த முன்னாள் டி.ஜி.பி. அலெக்ஸாண்டர், பிரபாகரனை பிடித்து தள்ளினார்.
நாராயணனை சூழ்ந்துகொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
பிரபாகரனை போலீஸார் கைது செய்ய, "ஈழப் பிரச்சினையில் ராஜீவ் காந்தியை திசை திருப்பியவன் இவன் (நாராயணன்). ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இவன்தான் காரணம்''. என் உணர்வுகளை வெளிப்படுத்தவே அடித்தேன். ஆனாலும் என் ஆத்திரம் அடங்கவில்லை' என்றிருக்கிறார் உணர்வுபூர்வமாக.
புதுக்கோட்டை அறந்தாங்கிக்கு அருகே உள்ள ஆவனந்தான் கோட்டையைச் சேர்ந்தவர் பிரபாகரன்.
இவரது தந்தை மெய்யப்பன், இலங்கையிலிருந்து 1973-ல் புதுக்கோட்டைக்கு வந்தவர். தாய் அன்னக்கொடியின் அரவணைப்பில் வளர்ந்தார் பிரபாகரன்.
பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பிழைப்பிற்காக மலேசியா சென்று 10 வருடம் உழைத்த பிரபாகரன் 2009-ல் சென்னை திரும்பிவிட்டார்.
அன்றிலிருந்து ஈழத்தமிழர்களுக்கான கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொள்வதை வழக்கமாக்கி கொண்டார் பிரபாகரன்.
நாராயணன் மீதான தாக்குதல் குறித்து நம்மிடம் பேசிய திருச்சி வேலுச்சாமி,
"இந்திய வெளியுறவுக் கொள்கையை ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிலை நிறுத்தியது இந்த நாராயணன்தான். ராஜீவ் கொலை சம்பந்தமான வீடியோ ஆதாரங்களை இன்றும் மறைத்து வைத்திருக்கிறார் இவர்.
இதனை ஜெயின் கமிசனிடம் நான் கொடுத்த வாக்குமூலத்திலேயே சொல்லியிருக்கேன். அந்த வீடியோ வெளி வந்திருந்தால் ஈழத்தில் நடந்தேறிய கொடூரங்கள் நடந்திருக்காது '' என்கிறார் மிக ஆவேசமாக.
காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் உணர்வு அலை அடங்காது.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்த ஒரு கருத்தரங்கத்தை 4ம் தேதி சென்னை மியூசிக் அகாதமியில் நடத்தியது இந்து ஆங்கில நாளேட்டின் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஆய்வு மையம்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் எம்.கே.நாராயணன்.
இதற்கு எதிராக மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததால், அரங்கத்திற்குள் வரும் பார்வையாளர்கள் அத்தனை பேரையும் சோதித்து அனுப்பினர்.
கேமராக்களுக்கும் மொபைல் கேமராக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தன.
கருத்தரங்கத்தில் பேசி முடித்துவிட்டு நாராயணன் வெளியேறும் போது, பார்வையாளராக கலந்துகொண்ட பிரபாகரன் என்ற இளைஞர், ""எல்லாத்துக்கும் நீதாண்டா காரணம்'' என சொல்லிக்கொண்டே செருப்பால் பளார்... பளார்... என அடித்தார்.
அப்போது அங்கிருந்த முன்னாள் டி.ஜி.பி. அலெக்ஸாண்டர், பிரபாகரனை பிடித்து தள்ளினார்.
நாராயணனை சூழ்ந்துகொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
பிரபாகரனை போலீஸார் கைது செய்ய, "ஈழப் பிரச்சினையில் ராஜீவ் காந்தியை திசை திருப்பியவன் இவன் (நாராயணன்). ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இவன்தான் காரணம்''. என் உணர்வுகளை வெளிப்படுத்தவே அடித்தேன். ஆனாலும் என் ஆத்திரம் அடங்கவில்லை' என்றிருக்கிறார் உணர்வுபூர்வமாக.
புதுக்கோட்டை அறந்தாங்கிக்கு அருகே உள்ள ஆவனந்தான் கோட்டையைச் சேர்ந்தவர் பிரபாகரன்.
இவரது தந்தை மெய்யப்பன், இலங்கையிலிருந்து 1973-ல் புதுக்கோட்டைக்கு வந்தவர். தாய் அன்னக்கொடியின் அரவணைப்பில் வளர்ந்தார் பிரபாகரன்.
பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பிழைப்பிற்காக மலேசியா சென்று 10 வருடம் உழைத்த பிரபாகரன் 2009-ல் சென்னை திரும்பிவிட்டார்.
அன்றிலிருந்து ஈழத்தமிழர்களுக்கான கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொள்வதை வழக்கமாக்கி கொண்டார் பிரபாகரன்.
நாராயணன் மீதான தாக்குதல் குறித்து நம்மிடம் பேசிய திருச்சி வேலுச்சாமி,
"இந்திய வெளியுறவுக் கொள்கையை ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிலை நிறுத்தியது இந்த நாராயணன்தான். ராஜீவ் கொலை சம்பந்தமான வீடியோ ஆதாரங்களை இன்றும் மறைத்து வைத்திருக்கிறார் இவர்.
இதனை ஜெயின் கமிசனிடம் நான் கொடுத்த வாக்குமூலத்திலேயே சொல்லியிருக்கேன். அந்த வீடியோ வெளி வந்திருந்தால் ஈழத்தில் நடந்தேறிய கொடூரங்கள் நடந்திருக்காது '' என்கிறார் மிக ஆவேசமாக.
காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் உணர்வு அலை அடங்காது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum