Top posting users this month
No user |
Similar topics
நிலத்தடி மாளிகை! கடாபி பாணியிலான ஆட்சியை முன்னெடுக்க முயற்சித்தாரா மகிந்த?
Page 1 of 1
நிலத்தடி மாளிகை! கடாபி பாணியிலான ஆட்சியை முன்னெடுக்க முயற்சித்தாரா மகிந்த?
ஜனாதிபதி மாளிகையில் இரகசியமான முறையில் நிலத்தடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடம்பர மாளிகை தொடர்பான தகவல் வெளியாகியுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச மாத்திரமல்ல அவருக்கு ஆதரவானவர்களும் பலவேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த மாளிகை விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க நிர்மாணிக்கப்பட்ட பதுங்குகுழி என மகிந்த ராஜபக்ச கூறுகிறார். பாதுகாப்பு சபை அங்கு கூடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மேற்படி மாளிகை பற்றிய தகவல் வெளியிடப்பட்டமையானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் முழு செயற்பாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த மாளிகையானது லிபியாவின் முன்னாள் தலைவர் முஹம்மர் கடாபி பாணியிலான நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான முக்கிய சாட்சியமாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணித்துக்கொண்டு ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் ஜனாதிபதிக்கான நிதியை ஒதுக்கியதும் இதனை உறுதிப்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
குறித்த நிலத்தடி மாளிகையில் இருந்து கொழும்பு துறைமுக திசையை நோக்கி சுரங்க தோண்டப்பட்டு வந்தமை குறித்தும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
உலகில் சர்வாதிகாரிகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மக்கள் எழுச்சிக்கொண்டு புரட்சிகளில் ஈடுபட்ட போது இப்படியான சுரங்க வழி பாதைகளை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாளிகை விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க நிர்மாணிக்கப்பட்ட பதுங்குகுழி என மகிந்த ராஜபக்ச கூறுகிறார். பாதுகாப்பு சபை அங்கு கூடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மேற்படி மாளிகை பற்றிய தகவல் வெளியிடப்பட்டமையானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் முழு செயற்பாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த மாளிகையானது லிபியாவின் முன்னாள் தலைவர் முஹம்மர் கடாபி பாணியிலான நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான முக்கிய சாட்சியமாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணித்துக்கொண்டு ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் ஜனாதிபதிக்கான நிதியை ஒதுக்கியதும் இதனை உறுதிப்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
குறித்த நிலத்தடி மாளிகையில் இருந்து கொழும்பு துறைமுக திசையை நோக்கி சுரங்க தோண்டப்பட்டு வந்தமை குறித்தும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
உலகில் சர்வாதிகாரிகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மக்கள் எழுச்சிக்கொண்டு புரட்சிகளில் ஈடுபட்ட போது இப்படியான சுரங்க வழி பாதைகளை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பழிவாங்கலை நிறுத்திவிட்டு 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கோரும் மகிந்த ராஜபக்ச
» அர்த்தமற்ற செயல்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாது: அஸ்கிரிய மகாநாயக்கர்
» சுன்னாகம் நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை: நிபுணர் குழு
» அர்த்தமற்ற செயல்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாது: அஸ்கிரிய மகாநாயக்கர்
» சுன்னாகம் நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை: நிபுணர் குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum