Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 30 பேர்! 100இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

Go down

பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 30 பேர்! 100இற்கும் மேற்பட்டோர் படுகாயம் Empty பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 30 பேர்! 100இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

Post by oviya Mon Oct 26, 2015 1:26 pm

பாகிஸ்தானில் இன்று 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 30 பேர் பலியாகியுள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் 102 கி.மீ ஆழத்தில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். காபூல் உள்ளிட்ட ஆப்கான் நகரங்களில் மின்சாரமும் தொலைபேசி சேவையும் முற்றாக துண்டிக்கப்பட்டன.

இதேபோல் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி பெசாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஸ்ரீநகர், சண்டிகர், சிம்லா, டெல்லி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

தற்போதைய தகவல்களின்படி பாகிஸ்தானின் பல நகரங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கட்டிடங்கள் இடிந்தும் மேற்கூரைகள் சரிந்தும் விழுந்ததில் 30 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கப் பகுதிகளில் சேத விவரங்களை ஆராய அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum