Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நீர்ப்பாசனப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒன்று கூடல் கிழக்கில்- இனத்தின் மீது அதிக பற்றுதல் வேண்டும்: துரைராசசிங்கம்

Go down

நீர்ப்பாசனப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒன்று கூடல் கிழக்கில்- இனத்தின் மீது அதிக பற்றுதல் வேண்டும்: துரைராசசிங்கம் Empty நீர்ப்பாசனப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒன்று கூடல் கிழக்கில்- இனத்தின் மீது அதிக பற்றுதல் வேண்டும்: துரைராசசிங்கம்

Post by oviya Sun Oct 25, 2015 2:08 pm


கிழக்கு மாகாணத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களை துரிதப்படுத்தி நீர்ப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் திலகராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கி.துரைராசசிங்கம் கலந்து கொண்டார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் முகமாகவும் அதன் அதிகாரிகளின் செயற்பாடுகள் பற்றி ஆராயும் முகமாகவும் கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன அமைச்சருடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றியும் அதன் அதிகாரிகளின் செயற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன். திணைக்களத்தின் 2015ம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன்,

எதிர்வரும் காலங்களிலான செயற்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்கள் அமைச்சருடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், அமைச்சின் செயலாளர் எஸ்.சிவநாதன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.தங்கவேல் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.













இரண்டாம் இணைப்பு

இனத்தின் மீது அதிக பற்றுதல் வேண்டும்

இந்த நாட்டில் நாங்கள் எல்லா வகையிலும் மிகவும் பலமுள்ளவர்களாக, அர்த்தமுள்ளவர்களாக, ஆரோக்கியமுள்ளவர்களாக எழ வேண்டும் என்கின்ற எண்ணமே ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சில் முக்கியமாகப் பதித்துக் கொள்ள வேண்டிய விடயமாகும். அதற்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது கல்வியே என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் 2015 நிதி ஒதுக்கீட்டில் மட்டிக்களி தமிழ் வித்தியாலயத்திற்கு நிழற் பிரதியெடுக்கும் இயந்திரம் அன்பளிப்பாக கையளிக்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களிலும் சரி இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சரி கல்வியில் சிறந்த முன்னேற்றத்தில் இருந்தது எமது தமிழினம். இலங்கை எப்போது சுதந்திரம் பெற்றதோ அன்றிலிருந்து தமிழரின் உரிமைகள் மெல்ல மெல்லவாகப் பறிக்கப்பட்டு இறுதியில் முள்ளிவாய்க்காலில் கொலைக் கருவிகளோடு வந்து கொத்துக் குண்டுகளைப் போட்டு எம்மவரை அழித்து எம்மினத்தையே அழிக்க நினைத்தது இந்தப் பேரினவாதம்.

ஆனால் அந்த அழிப்புக்குள்ளே இருந்து நாம் எழுந்திருக்கின்றோம்.

இந்த நாட்டில் நாங்கள் எல்லா வகையிலும் மிகவும் பலமுள்ளவர்களாக, அர்த்தமுள்ளவர்களாக, ஆரோக்கியமுள்ளவர்களாக, நிதானமான ஆக்ரோசமுள்ளவர்களாக எழ வேண்டும் என்கின்ற எண்ணமே ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சில் முக்கியமாகப் பதித்துக் கொள்ள வேண்டிய விடயமாகும்.

அதற்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது கல்வியே.

எமது அன்பளிப்புகளை நாம் இவ்வாறான பல சிறிய பாடசாலைகளுக்கே அதிகம் வழங்கியுள்ளோம் ஏனெனில் எமது கல்வி நிலை இங்குதான் குறைந்து காணப்படுகின்றது. இந்த நிலையினை மாற்ற வேண்டும்.

இவ்வாறான பாடசாலைகளுக்கு ஊக்கம் கொடுப்பதன் மூலம் அடிமட்டத்தில் இருக்கும் சமுகம் கல்வியில் முன்னேறும் அதன் மூலம் எமது இனத்தின் கல்வி நிலையும் உயரும்.

இந்தக் கிழக்கு மாகணத்தைப் பொருத்த மட்டில் நாம் கல்வியைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ஒப்பிட்டுப் பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம். நாம் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசி எந்தப் பயனும் இல்லை நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி செயற்பட வேண்டும்.

ஒருவருக்கு முதலில் வீட்டில் பற்று, மொழியில் பற்று, இனத்தில் பற்று, ஊரில் பற்று, பிரதேசத்தில் பற்று, நாட்டில் பற்று என்று பற்றோடு இருக்க வேண்டும்.

அந்தப் பற்று பொதுவான பற்றாக இருக்க வேண்டும். எனவே எமது பிரதேசத்தில் இருக்கும் பாடசாலை எமது பிரதேசத்துப் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் எழ வேண்டும் அப்போது தான் எமது கிராமத்துப் பாடசாலைகளும் முன்னேற்றம் காணும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum